Friday, July 1, 2016

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..



1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம்
செய்யும் போது ஆட்களே இல்லாத
அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும்
கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள்.
2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத்
தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும்
போதே தொலைபேசியில் உங்கள்
வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப்
பேசத் தொடங்குங்கள்.
3. பேருந்து நிலையம், இரயில் நிலையம்,
பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும்
ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள்
கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள்.
4. இரவில் வீதியில் தனியாக நடக்க
வேண்டி வந்தால்,
அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள்.
நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட
படி நடங்கள். தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட்
போனில் பேசுங்கள்.
5. கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும்
கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.
6. கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீசார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல்
நம்பர் கொடுக்காதீர்கள்.
7. காதலனே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற
இடங்களுக்கு செல்லாதீர்கள்.
8. மற்ற பெண்கள்
அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும்
எதையும் செய்யாதீர்கள்.
9. உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும்
சொல்லிதரக் கூடாது.
நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக்
கொள்ளுங்கள்.
10.உங்களுக்கு உங்களை விட பெரிய
பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக்
கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...