Thursday, August 25, 2016

நண்பர்களே 
இனிமேல ் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது ₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர். அவ்வாறு பிடிக்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது.
நான் 20-08-2016 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு ₹200 க்கு பெட்ரோல் பிடித்தேன் . பெட்ரோல் போடும்போது எனது வண்டியின் petrol tank கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி பிடித்து ( அதாவது பெட்ரோல் விழுவதை எனது கண் பார்வையில் படும்படி) பெட்ரோல் பிடிக்க ஊழியரிடம் கூறினேன். அவர் தயங்கி கொண்டு நான் கூறியவாறு செய்தார் . சரியாக ₹180 அளவு வரை பெட்ரோல் விழுந்தது. பின்பு இயந்திரத்தில் பண அளவு மட்டும் ஓடியது ஆனால் பெட்ரோல் விழவில்லை . சரியாக ₹195 அளவில் சிறு பெட்ரோல் விழுந்து ₹200 ல் பெட்ரோல் விழுவது நின்று விட்டது.
இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது automatic இயந்திரத்தில் அவ்வாறு தான் விழும் என் திமிறாக கூறினர்.


பின்பு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 1800224344 என்ற எண்ணில் புகார் செய்து 22 -08-16 அன்று உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நிர்வாகத்தை கண்டித்ததோடு இனிமேல் இது போன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
மேலும் அந்த அதிகாரி இனி பெட்ரோல் பிடிக்கும் போது 100 ,200 என் பண அளவில் பெட்ரோல் வாங்காமல் லிட்டர் அளவில் மட்டும் பெட்ரோல் வாங்க அறிவுரை கூறினார் . பண அளவில் பெட்ரோல் வாங்கும்போது அதிக பங்குகள் திருடுவதை ஒப்பு கொண்டார்.
லிட்டர் அளவில் பெட்ரோல் வாங்கும்போது 99% திருடு நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
எனவே இப்பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இனிமேல் பெட்ரோல் பிடிக்கும்போது லிட்டர் அளவில் மட்டும் பிடிக்கவும்.( நீங்கள் லிட்டர் பிடிக்கும் போது விலை லிட்டர் ₹58 .50 என இருந்தால் சில்லரை வசதிக்காக ₹60 க்கு பிடிக்கட்டுமா என கேட்டாலும் உடனடியாக மறுத்து விடுங்கள்) ₹60 க்கு பெட்ரோல் பிடித்தால் ₹53 அளவிலேயே பெட்ரோல் விழும்.
தற்போது அனைவரிடமும் வங்கி debit card அதனை பயன்படுத்தி பெட்ரோல் பிடித்தால் சில்லறை பிரச்சனை வராது. மேலும் வங்கி வழங்கும் reward நமக்கு கிடைக்கும் .personal claim செய்யும் போது கண்டிப்பாக debit card மூலம் மாதம் ஒருமுறை purchase செய்ய வேண்டும் என விதி உள்ளது.
எனவே மேற்கூறிய பதிவை தவறாமல் அதிக அளவில் பகிர்ந்து நாமும் கடைபிடித்து ஊழல் அரக்கனை விரட்டுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...