Thursday, August 11, 2016

இதெல்லாம் எங்கேபோய் முடியுமே தெரியலை.



மொதல்ல ஊருக்கு ஒரு சபை ஆரம்பிச்சானுக. இப்போ ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியா மனுசனை கடிச்ச கதையா அவனவன் இஷ்டத்துக்கு பைபிளில் உள்ளதையே மாத்தி எழுதி ஊரை ஏமாற்ற ஆரம்பிச்சிட்டானுக.
" அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 66 :23 ) -இதுதான் உண்மையில் பைபிளில் இருக்கும் வசனம். இதில் அமாவாசை எப்படி வந்தது?
இவனுக அமாவாசைக்கு பொறுக்கி திண்ண என்னவெல்லாம் செய்யுறானுக பாருங்க.
ஏற்கனவே பால் தினகரன், சாது சுந்தர், மோகன் சி லாசரஸ் என நிறைய ஹைடெக் வியாபார கும்பல் சுத்துது. இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் திடீர்னு ஒரு குடிசையை போட்டு 'நல்ல மேய்ப்பன் சபை', ' சமாரியன் சபை', 'கல்வாரி சபை' என புதுசு புதுசா போர்டு மாட்டி இம்சையை கூட்டுறானுக. அந்த போர்டுல பாஸ்டர் ஜேக்கப் இம்மானுவேல்னு போட்டிருப்பான். 
அவன்கிட்ட போய் 'டேய் போன வருசம்வரை உன் பேர் சக்திவேல்தான?'ன்னு கேட்டா
'ஆமாம் பிரதர். நான் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டுட்டேன்'னு நம்மளையே கதற விடுவான்.
அந்த குரூப்பெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்ததுதான் இந்த மாதிரி ஆடி அமாவாசை அலப்பறை.
இதெல்லாம் எங்கேபோய் முடியுமே தெரியலை.
வழக்கமா பெந்தகோஸ்தே கோஷ்டி பண்ணும் அலப்பரையால பாரம்பரிய கிறிஸ்தவ குடும்ப ஆட்களுக்கும் சேர்த்து திட்டு கிடைக்குது. இப்போ புதுசா இந்த கோஷ்டி வேற. ரொம்ப கஷ்டம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...