Thursday, August 18, 2016

அப்பனே தேவலாம் . புண்ணியவான்

ஒரு காட்டுவழியில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்து , கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம் .
அவனை திட்டாத சபிக்காத ஆள் அந்த பகுதியில் எவருமே இல்லை.
அந்த திருடனுக்கும் வயதாகி அவன் மகன் தகப்பனின் தொடர்ந்து வழிப்பறி செய்தான் .
.
அந்த தகப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே , என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்சநாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும் . அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான் .
. .

அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்கள் துணியை கூட விடாமல் உருவி விட்டான் .
பாதிக்கப்பட்ட மக்கள்
அடேங்கப்பா
இவன் அப்பனே தேவலாம் . புண்ணியவான்.
மானத்தோடாவாவது அனுப்பினான்.
இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுஷன்தான்..
என பேச துவங்கி விட்டார்கள் . .
. . .
தகப்பன் - காங்கிரஸ்
மகன் - பா.ஜ.

---
ராணுவம் , மருந்து உள்பட
100 % அந்திய முதலீடு அனுமதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...