Wednesday, August 10, 2016

புதுமையான போட்டி............

🤖புரோட்டா பிரியர்களின் கவனத்தை கவர நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் புதுமையான போட்டியை அறிவித்தது. நம்ம ஊரு பரோட்ட சூரி யாரு? என்பதே அந்த போட்டியின் பெயர். 👑
😜இந்த போட்டியில் கலந்து கொண்டு அதிக புரோட்டா சாப்பிடும் நபருக்கு ரூ.5001 பரிசு வழங்கப்படும் என அறிவித்து, அந்த ஓட்டல் தான் நடத்தும் போட்டி பற்றி ஊர் முழுவதும் போஸ்டர் அடித்தும் ஒட்டியது. அதை செல்போனில் படம் பிடித்த பலரும் தங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் அனுப்பினர். இதனால் அந்த செய்தி கல்லிடைக்குறிச்சி மட்டுமின்றி அனைத்து ஊர்களுக்கும் ‘வைரலாக’ பரவியது.
🏆இந்த போட்டி காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். அவர்கள் ஆளுக்கு ஆள் போட்டி போட்டு புரோட்டா சாப்பிட்டனர். ஆனால் 10-க்குமேல் சாப்பிட பலரும் திணறினர்.
அப்போது சிங்கையை சேர்ந்த கோதர் மைதீன் என்ற வாலிபர் புரோட்டாக்களை வாங்கி அசராமல் சாப்பிட்டார். இதைக் கண்டவர்கள் அவரை சுற்றி நின்று உற்சாகப்படுத்தினர். மொத் தம் 42 புரோட்டக்களை அவர் சாப்பிட்டார். 👀வேறு யாரும் இந்த அளவை எட்டாததால் அவருக்கு ரூ.5001 பரிசு வழங்கப்பட்டது. ‘இந்த போட்டியை அடிக்கடி நடத்துங்கள்’ என்று கூறியபடி பரிசுத் தொகையை கோதர் மைதீன் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...