Friday, August 19, 2016

விஜய் டிவியில் ஒரு கொள்ளை கும்பல்

விஜய் டிவியில்  ஒரு கொள்ளை கும்பல் ….
மக்களை ஏமாற்றுவது எப்படி ?

ஒரு கோடி  பணம் தருவதாக சொல்லி ஒரு
புரோகிராம் பண்ணி நம்மிடமிருந்தே 
கோடி கோடியாகக் கொள்ளை
அடிக்கிறது ஒரு கும்பல்.

எப்படி ?
ரொம்ப சிம்பிள் -
மக்களை ஏமாற்ற வழிகள் எத்தனையோ -
ஆனால்   பார்முலா ஒன்று  தான். தாம்  
ஏமாற்றப் படுகிறோம் என்பது மக்களுக்குத் 
தெரியாமலே அவர்களை 
ஏமாற்றிப் பிடுங்க வேண்டும்.
அதில் தான் சாமர்த்தியம்.
அதுவும் கேரளத்தவருக்கு சொல்லிக்
கொடுக்கவும் வேண்டுமா ? (விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்

-
அவர்களே !)

டிவியில் – பத்திரிகைகளில் -
பரபரப்பாக ஏகப்பட்ட  விளம்பரங்கள்.

“உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய 
ஒரு கேள்வி – பதில் சொல்லி -ஒரு கோடியை வெல்ல  வாருங்கள் “- என்று 
கவர்ச்சிகரமான  அழைப்பு !

மிக  மிக சுலபமான (அபத்தமான என்று கூட 
சொல்லலாம்!) ஒரு கேள்வி -
உதாரணம் -
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள,-
அணுமின் நிலையத்துடன் தொடர்பு கொண்ட இடம் -
கீழ்க்கண்ட 4 பதில்களில் எது சரி ? -

1) காங்கேயம்     2) கூடங்குளம்
3) கோயம்புத்தூர்    4) கோவில்பட்டி

இன்றைய தேதியில், தினந்தோறும் செய்தியில்
அடிபடும் கூடங்குளம் அணுமின் நிலையம்
பற்றி அறியாதோர் எத்தனை பேர்
தமிழ் நாட்டில் இருப்பார்கள் ?

ஆஹா -இவ்வளவு சுலபமான கேள்விகளா – 
என்று  கவர்ந்து இழுக்கப்பட்டு, உடனடியாக
பதில் அனுப்ப வேண்டும் என்கிற அவா – 
டெம்ப்டேஷன் -ஏற்படாதவர்களே இருக்க 
முடியாது. 
பதில் அனுப்பும் முறையோ – படு சுலபம்.

அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணுக்கு -
செல்போனில் குறுஞ்செய்தி (sms ) அனுப்பலாம்.
அல்லது அவர்கள் கொடுத்திருக்கும்
4 எண்களில் எதாவது
ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பதிலை பதிவு செய்யலாம்.

சரி -  இதில்  மக்கள் எந்த விதத்தில் 
ஏமாற்றப்படுகிறார்கள் ?

ஒன்று -  அநேகமாக அத்தனை பேருமே
சரியான விடை அனுப்பி இருக்கக்கூடிய நிலையில், அடுத்த நிலைக்கு
(next stage ) போட்டியாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது
எங்கும் விளம்பரப்படுத்தப்படவில்லை.
சரியான விடை அளிக்கும் அத்தனை பேரும் 
அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் 
என்பது எங்குமே சொல்லப்படவில்லை.  
போட்டியின் முக்கியமான விதிமுறை எங்குமே
சொல்லப்படாமலே போட்டிக்கு வலை வீசப்படுகிறது.

இரண்டு – இது மிக பயங்கரமான ஒரு மோசடி.
கோடிக்கணக்கான  நபர்கள் தொலைபேசி
அல்லது sms மூலம்
தொடர்பு கொள்வார்கள் என்கிற நிலையில்,
தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
செய்துகொண்டு,  இந்த விளம்பரம் வாயிலாக வரும் அழைப்புகளுக்கு 
ஒரு அழைப்புக்கு இவ்வளவு ரூபாய் 
நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு
தரப்பட வேண்டும் என்கிற வகையில் 
ஒரு ஏற்பாடு.

இந்த பணத்தை தொலைபேசி நிறுவனங்கள்
தங்கள் பங்கிலிருந்துகொடுக்க வேண்டாம்.
அதை உபயோகிப்பாளர்களிடமிருந்து
வசூலித்து  கொடுக்க வேண்டும் – அவ்வளவு தான்.

அதெப்படி – உபயோகிப்பாளர்கள் அவ்வளவு
சுலபமாகக் கொடுத்து விடுவார்களா ?

இங்கு தான் இருக்கிறது ட்ரிக்.
சாதாரணமாக  ஒரு  sms க்கு 50 காசுகள் என்றால்,
இந்த அழைப்பிற்கு மட்டும்
சில கம்பெனிகளுக்கு 5 ரூ.,    சிலதுக்கு 6 ரூ., ஒரு கம்பெனிக்கு ரூபாய் 6.99 . …
என்று பில்லில் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கு ஒத்துக்கொண்டு தான் நீங்கள் இந்த
வசதியை பயன்படுத்துகிறீர்கள் !

நாங்கள் எப்போது ஒத்துக்கொண்டோம் 
என்கிறீர்களா ?
அந்த விளம்பரங்களுக்கு கீழேயே கண்களுக்குப் 
புலப்படாத எழுத்துக்களில் இந்த கண்டிஷன் கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தொலைபேசி வசதிகளை  நாம் உபயோகித்து
பதிலை அனுப்புவதன் மூலம், அதை  படித்து,
ஏற்றுக்கொண்டு தான்
பயன்படுத்துகிறோம் என்பதை  நாம் உறுதி
செய்கிறோம்.(நமக்கு தெரியாமலே!)

உங்கள் வீட்டில் இந்த விளம்பரங்கள் கொண்ட
பத்திரிகைகள் இருந்தால் மீண்டும் எடுத்துப்
பாருங்கள். நாம் ஏமாந்திருப்பது புரியும்.

சில சிறுவர்களிடம் நான் பேசிப் பார்த்தபோது
இதன் விபரீதம் புரிந்தது.  சிலர் 4, 5 பதில்கள்
கூட அனுப்பி இருக்கிறார்கள்.  சிலர் வெவ்வெறு தொலைபேசிகளை

பயன்படுத்தி பல பதில்களை
அனுப்பி இருக்கிறார்கள்.
ஆசை  !! டிவியில் தோன்ற ஆசை – 
போட்டியில் வெல்ல ஆசை !!

இந்த தொலைபேசி அழைப்புகளின் மூலம்,  
sms களின் மூலம் – தொலைபேசி நிறுவனங்கள் 
மூலமாக பல கோடி ரூபாயை
நம்மிடமிருந்து – நமக்குத் தெரியாமலே -
அபகரித்துக்கொண்டு,
அதிலிருந்து , அப்படி கொள்ளை அடித்த
பணத்திலிருந்து ஒரு பகுதியை பரிசாக
கொடுக்கப் போகிறார்கள் !

இப்பேற்பட்ட ஒரு மெகா மோசடியை எப்படி
யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்
என்பது தான் புரியவில்லை.  காவல்துறை
இத்தகைய மெகா திட்டங்கள், போட்டிகளை
கண்காணித்து உரிய  எச்சரிக்கைகளை
கொடுத்திருக்க வேண்டும்.
போட்டி தொலைக்காட்சிகள் பல  இருக்கின்றன -
அவையும் காட்டிக் கொடுக்கவில்லை.
(ஒரு வேளை பின்னால் அவர்களும் இதே 
வழியில் இறங்கத் தீர்மானித்திருக்கலாம் ).
பத்திரிகைகளாவது விழிப்புணர்வுடன் இவற்றை
எல்லாம் கவனித்து  மக்களுக்கு
எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா ?
(ofcourse – ஒரு பத்திரிகை விடாமல், அத்தனை
பத்திரிகைகளையும்
“கவனித்து” கொண்டிருக்கிறார்கள் -)
எல்லாவற்றிற்கும் அரை அரை  பக்கங்களில்
ஏகப்பட்ட விளம்பரங்கள் -
அதுவும் காரணமாக இருக்கலாம் !

பண்டிகை காலங்களில் அனுப்பப்படும்
வாழ்த்துச்செய்திகள் அடங்கிய sms களுக்கு
அதிக தொகை வசூலிப்பதை கூட
ஆட்சேபித்திருக்கும் தொலை தொடர்பு
ஒழுங்குமுறைஆணையம்  இதை,
இந்த முறைகேட்டை, மோசடியை கவனிக்க
வேண்டும்.  உடனடியாக நடவடிக்கை எடுத்து
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை
தவிர்க்க வேண்டும்.

மக்களும்  தங்களது கடுமையான எதிர்ப்பை 
விஜய் டிவி க்கு தெரிவிக்க வேண்டும்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
ஏமாற்றுபவர்கள்  இருக்கத்தான் செய்வார்கள்.
நாம்  தான் ஏமாறுவதிலேயே -
பெருமை கொள்பவர்கள் ஆயிற்றே !


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...