திருப்பதி ஏழுமலையானுக்கு
பிரசாதமாக தினம் தினம் புது மண்சட்டியில் செய்யப்பட்ட தயிர்சாதத்தைதான் படைக்கின்றனர்.
திருமலையில் ஏழுமலைகள் மீது எழுந்தருளியிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள தங்கநகைகளை அணிவிக்கிறார்கள் என்றாலும் அவருக்கு பிரசாதமாக தினம் தினம் புது மண்சட்டியில் செய்யப்பட்ட தயிர்சாதத்தைதான் படைக்கின்றனர்.
அதுவே அவருக்கு விரும்பமானதாக இருக்கிறது. கராணம் அதுவே அவருக்கு பிடித்தமான ஒன்றாம்...
உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாக அறியப்படும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள். ஒவ்வொரு நாளும் நன்கொடைகள் ஏராளமாக சேர்ந்து கொண்டே இருக்கும். வருடாந்திர பிரம்மோத்ஸம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படும்..
மேலும் ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
அத்தகைய சீனிவாசப்பெருமாளுக்கு படையலாக தயிர்சாதம் படைக்கிறார்கள்... தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது.
ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் என்பது நம்பிக்கை.
தயிர்சாதம் ஒன்றே ஏழுமலையானுக்கு பிடித்த ஒன்று... அதனால்தான் அது அவருக்கு நிவதனமாக படைக்கப்படுகிறது...
ஓம் நமோ நாராயணா

No comments:
Post a Comment