Monday, May 22, 2023

சிந்தித்து செயல்படுவோம்!!

 {{}} யாரெல்லாம் நம்மோடு இருப்பர்

விலகுவர் என்று காலம் முடிவு
செய்வதில்லை..அவர்களின்
வார்த்தையும் நடத்தையும்தான்
முடிவு செய்கிறது!
{{}} வாய் தவறி விழும் பேச்சுக்கள்
கைதவறி விழும் கண்ணாடியை
விட கூர்மையானது!
{{}} யாரிடம் பேசுகிறோம் என்பதை
விட என்ன பேசுகிறோம்
என்பதை அறிந்து பேசுவோம்!
{{}} தன்னுடைய செயலும் வார்த்தை
களும் மட்டும் தான் சரியென்று
வாதாடுபவர்கள் மத்தியில்
அமைதியை மட்டும் நமது
ஆயுதமாக வைத்துக் கொள்ள
வேண்டும்!
{{}} இதுவும் கடந்து போகும் அது
பழமொழி.இதுவும் பழகிப்
போகும்..இது புது மொழி!
{{}} ஒவ்வொரு சோகமும் துன்பமும்
வாழ்க்கையில் நல்ல பாடத்தை
கற்றுத் தரவே வருகின்றது!
{{}} யாரும் உங்கள் கவலைகளை
பார்ப்பதில்லை..யாரும் உங்கள்
வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால்,எல்லோரும் உங்கள்
தவறை மட்டுமே பார்ப்பர்.
{{}} மனிதனும் வாழைமரமும்
ஒன்றுதான்..தேவைப்படும்
வரைதான் வைத்திருப்பர்
தேவை முடிந்தவுடன் வெட்டி
வீசிவிடுவர்.
சிந்தித்து செயல்படுவோம்!!
என்றும் அன்புடன்
உங்களில் நான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...