Tuesday, July 26, 2011

குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வேதனை தெரிவித்தார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவர் ஜாபர்சேட். தற்போது இவர் மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக உள்ளார். இவரது வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
ஜாபர்சேட் உள்பட 6 அதிகாரிகள் வீடுகளில் போலீசார் சோதனை: வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு
 
வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது வீட் டுக்குள் இருந்த யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்க வில்லை. அவரது வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள்.
 
சோதனை முடிந்த பின்பு தான் விவரங்கள் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். திருவான்மியூரில் வீட்டு வசதி வாரியத்திடம் வீட்டு மனைகள் பெற்றது பற்றியும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையிலும் இந்த சோதனை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.  
 
போலீஸ் அதிகாரி பாண்டியன், கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அறிவழகன் தனி உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர்சேட் கடந்த ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார்.
 
திருச்சி மண்டல ஐ.ஜி.யாக இருந்த அவர் சென்னையில் உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது கூடுதல் டி.ஜி.பி. பதவி காலியாக இருந்தது. ஜாபர் சேட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உளவுப் பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.நியமிக்கப்படாமல் இருந்தார். அதன் பிறகு ஜாபர் சேட்டுக்கு பதவி உயர்வு அளித்து உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.
 
தமிழக சட்டசபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.   ஜாபர் சேட் அங்கு பணியாற்ற மறுத்து விடு முறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
 
புதிய அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இட மாற்றம் செய்தது.   ஜாபர் சேட் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜாபர்சேட் வீட்டில் சோதனை நடத்தியது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம், போலீஸ் அதிகாரி பாண்டியன், அதிகாரிகள் அறிவழகன், வினோத், கணேசன் ஆகிய 5 அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஜாபர் சேட் நண்பர் ராஜு, நக்கீரன் காமராஜ், நஜுமுதீன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...