Sunday, July 24, 2011

வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்

செயற்குழு கூட்டத்தில் பேசிய கருணாநிதி பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார். பூஜ்யத்திலிருந்து மைனஸ் பக்கம் தி.மு.க போனால் தமிழ்நாட்டுக்கு நல்லது.

இன்று கலைஞர் டிவியில் மூன்று பேப்பரை வைத்துக்கொண்டு பரபர என்று உப்பு சப்பு இல்லாத தீர்மானங்களை ஒரு பத்திரிக்கை நிருபர் படித்துக்கொண்டு இருந்தார். இன்றைய கூட்டத்தில் வெளிவராத தீர்மானங்கள் கீழே...

1. 'அண்ணா' உருவாக்கிய லோக்பாலில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்.
2. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி எல்லோரும் இனிமேல் ஒரே ஹோட்டலில் தான் தங்குவார்கள்.
3. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கருணாநிதிதான் பெரிய மற்றும் இளைஞர் அணித் தலைவர்.
4. இனி அழகிரி சொல்லிக்காமல் ஓட மாட்டார்.
5. திமுக இருக்கும் வரை அன்பழகன்தான் நம்பர் 2.
6. வாரிசு அரசியல் என்பது கலைஞர் குடும்பத்தில் இருக்கலாம். ஆனால் இது மற்ற திமுகவின் அடுத்த கட்டத் தலைகளுக்குப் பொருந்தாது.
7. மாறன், ராசா பதவிகள் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் அவர்களை போல ஊழல் செய்யும் அளவுக்கு யாரும் பயிற்சி அடையவில்லை.
8. சட்ட மன்றத்தில் மட்டும்தான் வெளிநடப்பு என்றில்லை. பொதுக் குழுவிலும் செய்யலாம்.
9. வேற கட்சியில் இருந்தாலும் வீரமணிதான் திமுகவின் நிரந்தர/ஆஸ்தான செய்தித் தொடர்பாளர்.
10. கனிமொழி வெளியே வரும் வரை காங்கிரஸுடன் கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.
யார் முதலில் மஞ்சத் துண்டு வாங்கிப் போட்டுக் கொள்கிறாரோ அவருக்குதான் தலைவர் பதவி என்று ஒரு வதந்தி பரவ அழகிரி கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் மஞ்சள் துண்டு வாங்க போய்விட்டதாக செய்தி.
கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார் என்று செய்தி இப்போ வரை வரலை. :>

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...