Monday, July 25, 2011

காங்கிரசின் அடுத்த காமெடி இப்போ யுவராசு !

இன்று காலையில் எல்லா செய்திகளிலும் கையில் ஏதோ பேப்பர் சகிதமாக நாலு பேரு புகார் கொடுக்க வந்திருந்ததை காட்டினார்கள். தமிழக இளைஞர் காங்கிரசில் 35 லட்சம் இளைஞர்களை சேர்த்ததாக புருடா விட்ட யுவராசால் நாலு பேருக்கு மேல ஆளு சேர்க்க முடியவில்லை.. பாவம். சரிய்யா யாரு மேல புகாரு எதுக்கு புகாரு? அப்படின்னு செய்தியை பார்த்தா அதே பழைய பல்லவி சீமான் மீது நடவடிக்கை எடுக்கணும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசிட்டார் அப்படின்னு. அடப்பாவிகளா நாட்டுல என்ன நடந்திட்டு இருக்கு சமச்சீர் கல்வி வருமா வரதா?ன்னு ஒவ்வொரு பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். விலையேற்றம் மின் தட்டுப்பாடு, சாயக்கழிவுநீர்  எத்தனை எத்தனை மக்கள் பிரச்சனை இதுல இப்போ சீமான் மேல நடவடிக்கை எடுப்பதுதான் இவர்களுக்கு முக்கியமாப்போச்சாம். சீமான் ஆரம்பத்துல இருந்து இதைத்தானய்யா பேசிட்டு இருக்காரு. பலமுறை இதையே சொல்லி சிறைக்கு அனுப்பியும் நீதிமன்றம் தானய்யா அவர வெளிய அனுப்பி
இருக்கு. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்று நீதிமன்றம் வைகோவின் ‘பொடா’ கைதின் பொழுதே சொல்லிடுச்சே யுவராசு. இது தெரியாம ஏதோ கோமாவில இருந்து எந்திருச்ச மாதிரி கெளம்பி புகார் கொடுக்கிறேன் பேர்வழி என்று பப்ளிசிட்டி வேறு.

சரி, நாமளும் ஏதோ சின்னப்பய ஏதோ தெரியாம கிளம்பி வந்துட்டான் வீட்டுல இருந்து ஏதாவது பெரியவங்கள கூட்டிட்டு வாப்பான்னு சொல்லலாம்னு பார்த்தா. இவிங்க கோஸ்டில பெருசுங்க இவனைவிட  காமெடி பீசுங்க. கடந்த வார ஆனந்த விகடன்ல  தங்கபாலு கொடுத்த பேட்டியை பார்த்துட்டு அழுவதா சிரிப்பதான்னு நானே குழம்பிபோயிகிடக்கேன். இந்த வயசுலும் மனுசனுக்கு என்னவொரு
நகைச்சுவை உணர்வு. ஈழத்துக்காக தமிழ்நாட்டில் அதிகம் போராடியது ரெண்டு பேரு ஒருத்தர்  நெடுமாறன் இன்னொருத்தர் தங்கபாலுன்னு வேற சொல்லுறார் இதை படிச்சுட்டு எத்தனை பேருக்கு கிறுக்கு புடிச்சுச்சோ? எத்தனை பேருக்கு பேதியாச்சோ?. எப்படியா இப்படியெல்லாம் பேசிட்டு திரியுறீங்க எங்கள பார்த்தா அம்புட்டு மக்கு மாதிரியா தெரியுது.


தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை. சரி நம் தொப்புள்கொடி உறவுகள் மீது சிங்கள ராணுவம் புரிந்த இனப்படுகொலை குறித்தும் அக்கறையில்லை. மக்கள் என்றாலே அது நேருவின் மக்கள் என்று அன்றிலிருந்து புரிந்து  வைத்திருக்கிறீர்கள்.  தமிழர்களை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்று பிரிக்கும் புத்திசாலிகள் இத்தாலியில் பிறந்தவரை அன்னை   என்கிறீர்களே? என்றால்  நம்மை தேசத்துரோகிகள் என்று சொல்லுவார்கள்.  நாளை ஸ்பெயினில் இருந்து அண்ணியை இறக்குமதி செய்ய காத்திருக்கிறார்கள். இவர்களின் ஈழத்தமிழர்கள் துயரம் பத்தி பேசினால் என்ன புரியப்போகிறது?.தமிழர் பிரச்சனையில் இவர்களிடம் நாம் பேசியதெல்லாம்  எருமைமாட்டில் பெய்த மழையாக போய்விட்டது. இனியும் இவர்களோடு சீரியஸாக பேசி நமது ஆற்றலை வீணடிப்பதை விட்டுட்டு மக்களோடு மக்களாக இந்த காமெடி பீசுகளின் காமெடிக்கு சிரித்து வைத்துவிட்டு போவோம்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்து பேசும் சீமானை கைது செய்ய வேண்டும் -இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் #
உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கத்தில் இருக்கும் யுவராஜினை கைது செய்ய வேண்டும் – நாம் தமிழர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...