Tuesday, July 26, 2011

"சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. அதை சீரமைக்க அவகாசம் தேவைப்படுகிறது. பாடத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டவுடன், படிப்படியாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தாண்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.சமச்சீர் கல்வித் திட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் பிறபித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. இம்மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

கடந்த ஆட்சியில் சமூக சேவர்கள் என்ற பெயரில் சிலருக்கு முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் விதிகள் கடைப்பிடிக்க வில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் புகார் செய்யப்பட்டது. அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப் புத்துறைக்கு உத்தர விட்டார். லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. குணசீலன் மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி தகவல்கள் சேகரித்தனர்.
 வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு: ஜாபர்சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை- 5 பிரிவுகளில் வழக்கு
இது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் இறங் கினார்கள். முன்பு உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து தற்போது மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக பணியாற்றும் ஜாபர்சேட், தியாகராய நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் நஜீமுதீன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் ஆகியோரது வீடு அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தினார்கள்.
சோதனை நடைபெறுவதைத் தொடர்ந்து வீடுகள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் வரை சோதனை நீடித்தது. யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.  
 சோதனைக்குள்ளான கூடுதல் டி.ஜி.பி. ஜாபர்சேட் வீடு சென்னை அண்ணா நகர் 14-வது மெயின் ரோடு ஆர்.பிளாக்கில் உள்ளது. இங்கு சோதனை நடத்தப்பட்டது.வீட்டில் இருந்தவர்களிடம் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தினர்.
ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் சேட், மகள் ஜெனிபர் ஆகியோர் பெயரில் தியாகராய நகரில் உள்ள லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறு வனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடங்களை முறை கேடாக வாங்கி அதில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் அலுவலக உதவியாளாக பணியாற்றிய சங்கர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.   சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியது.
இதையடுத்து ஜாபர்சேட் அவரது மனைவி பர்வீன்சேட், மகள் ஜெனிபர், கட்டுமான நிறுவன அதிபர் நஜிமுதீன், துர்காசங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 120பி, (கூட்டுசதி), 420 (மோசடி), 109, லஞ்ச ஒழிப்பு பிரிவு 13டி, 132 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர்சேட் கடந்த ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜி. யாக இருந்த அவர் சென்னையில் உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது கூடுதல் டி.ஜி.பி. பதவி காலியாக இருந்தது.
ஜாபர் சேட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உளவுப் பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.நியமிக்கப்படாமல் இருந்தார். அதன் பிறகு ஜாபர் சேட்டுக்கு பதவி உயர்வு அளித்து உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை மேற்கு வங்கா ளத்துக்கு தேர்தல் பார்வை யாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.   ஜாபர்சேட் அங்குபணி யாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். புதிய அரசு அவரை உளவுத் துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய் தது.
ஜாபர்சேட் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜாபர்சேட் வீட்டில் நடந்த சோதனை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சோதனை நடந்த துர்காசங்கரின் தந்தை ராஜமாணிக்கம் முன்பு செய் தித்துறை செயலாளராக இருந்தார். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீட்டில் வசித்து வருகிறார். இன்று இங்கு போலீஸ் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். இவர்கள் முறைகேடாக பெற்ற வீட்டு மனைகளை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பெரியகுளத்தில் உள்ள ஜாபர்சேட்டின் மாமனார் டாக்டர் சலீம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...