Tuesday, July 19, 2011

மு.க.அழகிரி அல்லக்கைகள் கைதால் மதுரையில் பதட்டமா..?நக்கீரனின் குசும்பு

மதுரை மு.க.அழகிரி யின் இடம்,வலது கைகளாக செயல்பட்ட பொட்டு சுரேஷ்,மற்றும் சில தி.மு.க வினர் இன்று மாலை நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.நக்கீரன் இணையதளம் இதை மதுரையில் பெரும் பதட்டம் என்பது போல செய்தி வெளியிட்டுள்ளது.


எப்போதும்,தினமலர் செய்தி வெளியிட்டதும் அடுத்த செகண்டில்நக்கீரன்,தட்ஸ் தமிழ் இணையதளங்கள்  செய்தி வெளியிடும் .ஆனால் நக்கீரன் இப்ப ஸ்லோ.விசாரிக்கும்போதே மதுரையில் பதட்டமாம்.இது அ.தி.மு.க ஆட்சி கோபால் அண்ணே.சொம்பை நசுக்கிருவாங்க.தெரியுமில்ல.அங்க இருக்குற டி.எஸ்.பி. முதல் எஸ்.பி வரை சாதரண தலை இல்ல.கலவரம்,பூகம்பம் நு கதை விடாதீங்க.அழகிரியே கைது ஆனாலும் மதுரை அல்லக்கைகள் கப்சிப்தான்.

பொட்டு சுரேஷ் தி.மு.க ஆட்சியில் செய்த திருவிளையாடல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.மதுரையில் பல கோடி பெருமானமுள்ள இடத்தை வெறும் 40 லட்சம் கொடுத்து மிரட்டி வாங்கியதற்காக இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொட்டு சுரேஷ் பற்றிய ஒரு கிசு கிசு செய்தியை வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் பத்திரிக்கை யை பகிரங்கமாகவே மிரட்டியவர்.ஜூனியர் விகடனே இவரை கண்டு அஞ்ச வேண்டிய சூழலும் அப்போது இருந்தது.ஜூ.வி.ஆசிரியர்கள் அந்த வழக்கு சம்பந்தமாக மதுரை கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலை வந்தபோது ஜூனியர் விகடனில் எமெர்ஜென்ஸி செய்தி போல வெளியிட்டு மதுரை வாசகர்கள் பக்க துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டே மதுரை வந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...