Thursday, December 17, 2015

மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! – அவசியத் தகவல்

மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! – அவசியத் தகவல்

மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! அவசியத் தகவல்
 1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு  பொருத்தமாக
இருக்கும் ஜீன்ஸ் அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.
2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர்களு க்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவ ரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என் றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்த மான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.
4.பெண்கள் புதிதாக தொழில்தொடங்க அதிக ஆர்வம் காட் டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தி யை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகு முறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
5.சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்றுஎண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்கிடைக்கிறது. வீட்டில் சாத ம் , கூட்டு பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடை க்கின்றன.
6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடு பாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.
7.டி.வி பார்க்கும்போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங் கள்மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அம்மாதி ரியான தொந்தரவுக்கு இடம்கொடுக்காமல் தள்ளிஉட்கார்ந் து விடுங்கள்.
8.வீட்டில்பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கில்லாமல் சிதறி க் கிடந்தால் எரிச்சல்ஏற்படும். இப்படி சிதறிக்கிடக்கும் பொ ருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக் கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.
9.குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்தி டுங்கள். கொதிக்க வைத்து ஆறிய பின் அதை குடிராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உடான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.
10.வீட்டில் தனியாக இருக்கும்போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளைதெரிந்துவைத்திரு ங்கள். தற்காப்புகலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க ட்டும்.
11.பெண்கள் தொழில்படிப்புபோன்ற காரணங்களுக் காக வெளியூர்களில்தனியாக வசிக்கநேரிடலாம். அம் மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்படி இருப்பதால் மன ரீதியாக தைரியம் கிடைக்கும்.
12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப் பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்க ளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்ய வேண்டும்.
13.திடீரென உங்க வீட்டிற்கு உறவினர்கள் அதிகபேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந் நேரங்களில் டென்ஷன் ஆகாமல்இன்முகத்தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளி ன் பாதி பசியை போக்கிவிடும்.
14. புத்தகங்களை படிப்பதுபோல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்றுபதிவுகளையும் படிப்பத ன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.
15.தினமும் அதிகாலை 5மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...