Monday, December 28, 2015

கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்!

கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்!

கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்!
உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின் றன. இந்தியாவில் இதை
சுபம்தரும் சின்னம்மாகக் கருதுவர். புண்யகாலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியை யும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பா டலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்).
கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “ கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்கு வது போல” என்ற உவமை தமிழ், வட மொழி இலக்கிய ங்களில் பலஇடங்களில் பயிலப்படுகின்றன. ஆதி சங்க ரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல் காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.

மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இத ற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கை யாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை கார ணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடி வைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணா டி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறி ஞர்களும் எழுதி வைத்துள்ளனர்.



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...