Monday, December 28, 2015

கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்! கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்! உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின் றன. இந்தியாவில் இதை சுபம்தரும் சின்னம்மாகக் கருதுவர். புண்யகாலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியை யும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பா டலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்). கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “ கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்கு வது போல” என்ற உவமை தமிழ், வட மொழி இலக்கிய ங்களில் பலஇடங்களில் பயிலப்படுகின்றன. ஆதி சங்க ரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல் காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன. மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இத ற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கை யாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை கார ணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடி வைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணா டி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறி ஞர்களும் எழுதி வைத்துள்ளனர். => நிறைமதி

விஞ்ஞானம் சொல்லும் சில விசித்திர உண்மைகளும், பல ஆச்சரிய சம்பவங்களும்!


விஞ்ஞானம் சொல்லும் சில விசித்திர உண்மைகளும், பல ஆச்சரிய சம்பவங்களும் !
இந்த உலகத்தில் நாம் அதிசயிக்கும் வகையில் சில உண்மைகளும், ஆச் சரியப்படும் அளவுக்கு பலசம்பவங்களும் உண்டு. அவற்றை நீங்கள் படித் தால், வியப்பின்
உச்ச‍த்திற்கே நீங்கள் செல்வீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதோ அந்த உண்மைகளையும் சம்பவங்களையும் இங்கு பார்ப்போம்.
*ஒரு ஆண் தன் வாழ்நாளில் 6 மாதங்களை ‘முகச் சவரம்’ (ஷேவ்)செய்வதற்கு எடுத்துக்கொள்கிறானாம். அதே போல் நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் ஆறு மாத காலங்களை வீணாக்குகிறீர்களாம்!
* உங்களுக்குத்தெரியுமா, முதலில் ‘ஹை ஹீல்ஸ்’ செருப் பு ஆண்களுக்காகத்தான் உருவாக்கப்பட்ட தாம்.  ஆண்கள் ‘ஹை ஹில்ஸ்’ அணிந்து வீதிகளில் நடந்து வந்த கால ங்கள் இருந்தனவாம். பின்னர்தான் அதை பெண்கள் ஆக்கி ரமித்துக் கொண்டனராம்.  
*பெண்களின் மூளை அளவை விட ஆண்களின் மூளை அளவு 10 வீதம் பெரியதாம். கடினமான தோல்களை கொண்டதால் தான் இப்படி பெரியதாம். அதற்கும் மூளையும் செயல்பாட்டு க்கும் சம்மந்தம் இல்லையாம்!  
* கவலை தரும் செய்தி ஒன்று : ஒவ்வொரு 90வது நொடிக் கும் ஒரு பெண், பிரசவத்தின் போது இறக்கிறாளாம் என ஆய்வு சொல்கிறது.
*பெண்கள் அதிகமாக பேசுகிறாள் என்று வருத்தப்பட்டிருக்கி றீர்ளா..? ஒரு நாளைக்கு பெண்கள் சராசரியாக 20 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். ஆண்கள் அப்பாவி , வெறும் 13 ஆயிரம் வார்த்தைகளை தாண்டுவதில்லையாம்.. (ஒரு வார்த்தை கூட பேசத் தயங்கும் பெண்களு ம் உண்டு, இவ்வுலகில்…! )  
*உலகில் பணக்கரப்பெண்களை கணக்கிட்டால் இருபதில் ஒருவர்தான் சொந்தமாக பணக்காரர் ஆவராக இருக்கிறா ராம். ஏனையவர்கள் தங்கள் அப்பாவின் சொத்து மூலமா கவோ, கணவரின் சொத்து மூலமாகவோ பணக்காரர் ஆனவர்களாம்.  
* மிக சுவாரஷ்யமான செய்தி ஒன்று : ஒரு பெண்ணால் சராசரியாக 47 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தான் தங்கள் ரகசியத்தை பேண முடியுமாம். (அடடே..)  
* எந்த உடையை அணிந்து வெளியில் செல்வது? என்ற யோசனைக்கு வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவு செய் கிறார்களாம் பெண்கள்! 
* உங்கள் மூளை தினமும் சிந்தித்துக்கொள்ள உடலில் இருந்து 20 தொடக்கம் 30 விழுக்காடு கலோரிகளை எடுத்துக்கொள்கிறதாம்.
* ஆணோ, அல்லது பெண்ணோ தனது 35 வது வயதை அடைந்து விட்டதும், தினமும் 7000 மூளை செல்களை இழக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம்.  
*‘ஒக்ஸ்போர்ட்’ ஆங்கில அகராதியில் 2006 ஆம் ஆண்டு ‘கூகுள் ’ என்ற வார்த்தை பெயர்ச்சொல்லாக சேர்க்கப்பட்டது! மெக் டொனால்ட் உணவகத்தின் ‘டுவிட்டர்’ கணக்கை பராமரிக்க 10 பேர் வேலை செய்கிறார்களாம்.
* லண்டனில் ஒவ்வொரு பெண்ணும், தன் வாழ்நாளில் சராசரியாக 111 கைப்பையை சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம்.
* நாங்கள் அசதியாக இருக்கிறது என தூங்கி ஓய்வெடுக்கிறோம். ஆனால் இந்த விஞ்ஞானிகளால், ஏன் நாம் தூங்குகிறோம் என்ப தற்கான சரியான காரணத்தை இன்று வரை கண்டறிய ப்படவில்லை என்பதே உண்மையாம்.
*இருவர் உதட்டோடுஉதடு வைத்து முத்தமிட்டுக் கொள் ளும் போது 10 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் வரை ‘பக்டீரியாக்களை’ இடம் கடத்துகிறார்களாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...