Thursday, December 10, 2015

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்!

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்!
தூக்க‍த்தில் குட்டித் தூக்கம், சின்னத் தூக்கம், நீண்ட தூக்கம், அரை தூக்கம், ஆழ்ந்த தூக்க‍ம் என சிலவகைகள் உண்டு. இந்த
தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண் மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
நமது உடலின் தூக்கத்தைக்கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒருசில விஞ்ஞா னிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப்பகுதி களில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல் வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என் கின்றனர். இன்னும் சில விஞ்ஞானிகளோ, நாம் தினச ரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சிïட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம் தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.
நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மூளையின் ஹைப் போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறு கின்றனர்.
தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபி க்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலி ல் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோத னையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங் குகளால் தூக்க மில்லாமல் அதிக பட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.
மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட் டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றா டம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக்கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் உடல்வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும். மூளைக்குவேலை கொ டுப்பவர்கள் உடலுக்கு வேலை கொடுப்பவரகளைவிட சற்றுக்குறைவாகத் தூங்கவேண்டு ம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவாராம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...