Monday, December 28, 2015

நமக்கு, உயிர் பயத்தை காட்டியே கொள்ளை லாபம் பார்க்கும் மருந்து கம்பெனிகள்

நன்றாகப்படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளைக்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர் க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாம ல்போய், சேமித்து வைத்த மொத் தப் பணத்தையும் மருத்துவமனை க்கும், மருந்து நிறுவனங்களுக்கு ம் தந்து விட்டு, என்ன செய்வ தென்று தெரியாமல் முழிக்கி றோம்.
 
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில நோய்கள் வந்தால், வாழ்நாள்சேமிப்பே கரைந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய நோய்களில் ஒன்று தான் கேன் சர். இந்த நோயினால் இதுவரை சொல்ல முடியாத கஷ்ட த்துக்குள்ளானவர்கள் சமீபத்தில் வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சந்தோஷப்படலாம். அது என்ன தீர்ப்பு?
 
மகிழ்ச்சி தந்த தீர்ப்பு!
 
சுவிட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நொவார் டிஸ் (novartis). இந்நிறுவனம் கேன்சர் நோய்களுக்கான க்ளிவெக் (Glivec) என்ற மருந்தை விற்று வந்தது. ஆனால், இது அத்தியா வசியமான மருந்து என்பதால், இந்த மருந்தின் ஃபார்முலா வை வைத்து மற்ற நிறுவனங் களும் அதேபோன்ற மருந்தை த் தயாரிக்க மத்திய அரசு அனுமதி தந்தது.
 
இந்த மருந்தை தான் மட்டுமே தயாரிக்கும் காப்புரிமையை நொவா ர்டிஸ் நிறுவனம் கேட்டபோது, தரமுடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் 2005-ம் ஆண்டே தீர்ப்பு தந்த து. அதன்பிறகு இந்நிறுவனம் 2009-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கடந்த நான்கு வருடங்க ளாக நட ந்து வந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சொன் னது இந்திய உச்ச நீதிமன்றம்.
 
‘இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏற்கெனவே இருக்கும் மரு ந்தின் ஒரு சிறிய மாறுபட்ட வடிவம்தான். அதனால், இந்த மருந்து க்கு காப்புரிமை (பேடன்ட்) தரமுடியாது’ என்று சொல்லி ஏழு வருட போராட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.
 
 
இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நொவார்டிஸ் நிறுவனம், இனி இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட மாட்டோம் என்றுசொல்லி இருக்கிறது. இதுவரை விற்ற மருந்துகளில் 95 சதவிகித மருந்துகள் இந்நிறுவனத்தின் அறக்கட்டளை மூல மாக ஏழைகளுக்கு இலவசமாகத் தந்தி ருப்பதாகவும், கிட்டத்தட்ட 16,000 பேர் இத னால் பயன் அடைந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. ஆனால், இதன் ஜெனரிக் வகை (அதாவது, ஒரு மருந்தி ன் காப்புரிமை முடிந்தபிறகு அந்த மருந்துக்கான ஃபார்முலாவை வைத்து வேறு நிறுவனங்கள் அதே நோய்க்கு மருந்து தயாரிப்பது தான் ஜெனரிக்) மருந்துகளை 3 லட்சம் பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இத ற்கு காரணம், நொவார்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் விலை மாதத் திற்கு சுமார் 1.4 லட்சம் ரூபாய். ஆனால், மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதே மருந்தின் விலை சுமார் 8,500 ரூபாய் மட்டுமே.
 
இவ்வளவு விலை உயர்ந்த மருந்தினை 95 சதவிகித மக்களுக்கு இலவசமாகக் கொடுத்ததாகச் சொல்லும் இந்த மருந்து நிறுவனம், ஏன் இந்தத் தீர்ப்புக்காக கவலைப்படவேண்டும்?
 
 

”அங்குதான் இந்நிறுவனத்தின் பிஸினஸ் இருக்கிறது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனத்துக்குச் சாதகமாக வந்திரு ந்தால், இந்த மருந்தினை வேறு யாரும் தயாரிக்க முடியாது. அப்போது, இந்நிறுவனம் வைத்தது தான் விலை என்றாகி இருக்கும். அதன் பிறகு சேவையாவது, மண்ணாவது! ஒரு மாதத்துக்கான மருந்து 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆரம்பித் திருக்கும். பணமிருப்பவர்கள் வாங் கிச் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால், பணமில்லாத ஏழைகள் தானே நம் நாட்டில் அதிகம். மருந்து வாங்க வழி இல்லாமல் பலரும் மடிந்துதான் போயிருப்பார்கள்”.
 
உணவே மருந்து என்கிற காலம் போய், இப்போது மருந்தே உணவு என்ற நிலைமைக்குப் பலரும் வந்துவிட்டோம். வெளியூர்களுக்குச் செல்லும்போது துணிமணிகளை எடுத்துக்கொள் கிறோமோ இல்லையோ, அனைவரிடமும் ஒரு மருந்துப்பை இருக்கிறது. மருந்து கள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழவே முடியாது என்கிற நிலை க்கு நாம் வந்திருப்பதை நம்மை விட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நன்றா கவே தெரிந்துவை த்திருக்கின்றன. நம் உயிர் பயத்தையே அடிப்படை யாக வைத்து மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன.
 
இப்படி லாபம் சம்பாதிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பெரிய அள வில் செலவு இல்லை. உதாரணமாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பரச் செலவு கிடையாது. அதற்கு பதிலாக, மருத்துவர் களுக்குச் ‘செலவு’ செய்வதன் மூலம் தங்கள் மார்க்கெட்டிங்கை கனகச்சிதமாகச் செய்துவிடுகின்றன மருந்து கம்பெனி கள்.  
 
மருத்துவர்களின் வீடு மற்றும் மருத்துவ மனைக்கு குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வாங்கித் தருவது, சேர்கள் வாங்கித் தருவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல் வது என மருந்து கம்பெனிகள் செய்யும் செலவு ஏராளம். அதற்கு கைமாறா க டாக்டர்களும் அதிகளவு மருந்து களை எழுதித் தள்ளி, தங்கள் நன்றி க்கடனை மருந்து கம்பெனிக ளிடம் காட்டி விடுகிறார்கள். மருந்து களில் மட்டுமல்ல, பரிசோதனை லேப்களி லும் நடக்கி றது.
 
45 வயதுக்கு மேல் மருந்து மாத்திரை யோடுதான் நம்மில் பலர் வாழ்கிற சூழ்நிலையில், மருந்துகளுக்கு லாப உச்சவரம்பு நிர்ணயம்செய்தால் மட்டுமே இனி பலரும் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கி றது. தரமான கல்வியும், சுகாதார வசதியும் ஒவ்வொருவருக்கும் அளி க்கவேண்டிய கடமை அரசாங்க த்துக்கு உண்டு. இந்த இரண்டையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பிக்கப் பார்க்கி றது மத்திய அரசாங்கம். மருந்து கம்பெனிகள் அரசாங்கத்தின் வாயையும் அடைத்துவிடுகிறதோ என்னவோ!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...