Tuesday, December 1, 2015

மெட்ரோ இரயிலின் சிறப்பம்சங்களும்! கட்ட‍ண விவரங்களும்! – ஒரு பார்வை

மெட்ரோ இரயிலின் சிறப்பம்சங்களும்! கட்ட‍ண விவரங்களும்! – ஒரு பார்வை

மெட்ரோ இரயிலின் சிறப்பம்சங்களும்! கட்ட‍ண விவரங்களும்! – ஒரு பார்வை
புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோ இரயிலுக்கு கிடைத்த‍ வெற்றியாலு ம் மக்க‍ளிடையே கிடைத்துவரும் அமோக வரவேற்பினாலும் உந்தப் பட்டு, அதை சென்னையிலும்
செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் த
Mr. E. Shridharan
லைவர், திரு. E. ஸ்ரீதரன், திட்டவரை வினை 2001 -2006 வரை தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவிடம் அளித்தார்.  பின்னர் 2006இல் நடைபெற்ற‍ சட்ட‍ மன்ற தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, முதல்வராக பொறுப்பேற்ற திரு. மு. கருணாநிதியால் மீண்டும் இத்திட்ட‍ம் கையில் எடுக்கப்பட்டு, கோயம் பேட்டில் 10-6-2009 அன்று முன்னாள் துணை முதல்வர் திரு. முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதன் பின் செயல் வடிவம் கொடுக் கப்பட்டு, முதல் கட்ட‍மாக‌ தற்போது நிறைவு பெற்று சென்னை ஆலந்தூர்-கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை  இதனை தற் போதைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டுள்ள‍து.

* மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல் வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக் கும்.
* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ள தால், நடைமேடையை அடை ந்த பின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.
* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
* பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்க ளூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை.
* ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சி.சி.டி .வி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
* அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான் கள் அமைக்கப்பட்டுள்ளன.
* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட் டை தமது அறையில் இருந்த படியே ஓட்டுநர் கண் காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
* ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில் கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை.

பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி
*மெட்ரோ ரயில்பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு ள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதி நவீன பாதுகாப்பு மற்றும் வசதி கள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக் கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும்இருக்கும்.
* ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400பேர் பயணம் செய்யமுடியு ம். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத் தில் ரயில் இயக்கப்படும்.
* கோயம்பேடு – ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின் னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப் படும்.

*அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கமுடியும். ஒவ்வொரு ரயில்நிலையத்திலு ம் சுமார் 30நொடிகள்வரை ரயில் நின்றுசெல்லு ம்.
கட்டண விவரம்:
மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்கநிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இரு மடங்கு செலுத்த வேண்டும்.
*ஆலந்தூர் – ஈக்காட்டுதாங்கல்: ரூ10
*ஆலந்தூர் – அசோக்நகர்: ரூ.20
*ஆலந்தூர் – வடபழநி: ரூ.30
*ஆலந்தூர் – அரும்பாக்கம்: ரூ.40
*ஆலந்தூர் – சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40
*ஆலந்தூர் – கோயம்பேடு: ரூ.40
ரயில் பயண கால அட்டவணை:
*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.
*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.
*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.
*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.
எத்தனை ரயில்கள்?
*தினசரி கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும்.
*அதேபோல் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப் படும்.
*நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும்.
*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.
*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இரு மார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.
*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...