Sunday, December 6, 2015

கடவுளின் பிள்ளைகளே! உங்களுக்கு முன் கைகள் குவிக்கின்றோம்.

உங்களிடம் பெரும் பணம் இருந்தால் உங்களுக்கு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்னமிருந்தால்...
முதலமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி... மனநிறைவு கொள்ளாதீர்கள்....
வீட்டை விட்டு வெளியே வாங்கள்...உங்கள் அருகில் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று... இரண்டு அல்லது மூன்று குடும்பதை தத்து எடுத்துக்கொள்ளுங்கள்..
மழை வடிந்த பிறகு அவர்களுக்கு உடனே தேவை அத்தியாவசிய பொருட்கள்...
வாழ்நாள் எல்லாம் அந்த குடும்பங்கள் உங்கள் வாழ்த்தும்.. உங்களுக்கே ஒரு மன நிறைவு இருக்கும்... அது மட்டுமல்ல விரைவாய் உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்று அடையும்...
அரசு நிர்வாகம் இயங்கி அது பாதிக்கப்பட்டவர்களை சென்று அடைய அடுத்த பருவமழை வந்துவிடும்...
உதாரணத்துக்கு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும பிள்ளைகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு மேல்தான் இலவச புத்தங்கள் புத்தம் புதியதாய் கிடைக்கும்...

நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..


ஆக்ஷுவலாக இந்த பாதிப்புக்கு பத்து ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்...
ஆனால் மதியத்துக்கு மேல்தான் படகுகள் லாரியில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க ஆரம்பித்துள்ளன...
பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டும் இல்லையென்றால்..... நினைத்து பார்க்கவே பயமாக இருக்கின்றது..


சென்னை ஏர்போர்ட்டின் மூன்றாவது ஒடுதளம் அடையாற்றின்மேல்தான் அமைந்துள்ளது...
இந்தியாவிலேயே ஆற்றின் மீது ரன்வே அமைத்த ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட்தான்...
அடையாறு ஆறு அனாகபுத்தூர் பொழுச்சலூர் வழியாக மீனம்பாக்க ஏர்போட்டை செல்லமாக எப்போதுமே பின் பக்கம் தட்டிவிட்டுதான் ராமபுரம் பக்கம் வளைந்து காசி தியேட்டர் பக்கம் வரும்...
ஆனால் செம்பாரம்பாக்கம் ஏறி திறப்பில் உணர்ச்சி வேகத்தில் கரை புரண்ட வெள்ளம் நேராக ஏர்போட்டின் பின் பக்கம் வேட்கையோடு புகுந்து விட...
ஏர் பஸ் எல்லாம் எம்டிவி பேருந்து போல மிதக்க...
ஏர்போர்ட் இரண்டு நாளைக்கு ஷட்டவுன் என்று ஏர்போர்ட் நிர்வாகம் கை விரிக்க..
கியா பாய் சாப்... சென்னை பிளைட்மே கேன்சல் ஓகயா என்று டெல்லி அலற ..
அதன் பின்தான் டெல்லி மீடியாக்களுக்கு இந்திய வரைபடத்தில் இருக்கும் தமிழ்நாடு கண்ணுக்கே தெரிந்தது...
சென்னை மாவட்ட நிர்வாகம் சொல்லி இருக்க வேண்டும்... அவர்கள் அலர்ட்டாக இருந்து இருந்தால் இவ்வளவு சேதம் இருந்து இருக்கும்.. ஆனால் மேல் தளத்தில் மாட்டிக்கொண்டு பசியில் வாடும் மக்களை ரெக்கவர் செய்து இருக்கலாம்.. இன்னும் நிறைய பேர் மீட்கப்படவில்லை என்பதுதான் நிஜம்... அதுதான்
உண்மை.


எச்சரிக்கை...
தயவு செய்து முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்...
. சென்னை கடலூர் பகுதிகளில் வெள்ள நிவாரணம் செய்கின்றோம் என்று வாட்ஸ் அப் மற்றும் சோசியல் மீடியாக்களில் மனதை பிசையும் படங்களை வெளியிட்டு ஊர் பேர் தெரியாதவர்கள் அக்கவுண்ட் நம்பர் கொடுத்து பணத்தை போடுங்க என்று சொன்னால் ...பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்..
உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள், மற்றும் உறவினர்கள் மூலம்... உங்கள் உதவிகளை செய்ய வேண்டுகிறேன்..
போட்டோஷாப் செய்து வெள்ள நிவாரண உதவி செய்கிறேன் என போலிகள் பெருகி நிறைய பணத்தை அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன....
போட்டோ ஷாப் வேலை செய்யும் பசங்களே... எரிச்சலுடன் பகிர்ந்த செய்தி இது...
தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும்...
ஏன்டா இதிலேயுமாடா??
உருப்படவே மாட்டிங்கடா.. எரியற வீட்டுல புடுங்கனது எல்லாம் லாபம் என்பது பெரும் பாவம்டா ..
நிறைய பேர் எச்சரிக்கையாக இருக்க இதனை ஷேர் செய்யவும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...