Wednesday, December 16, 2015

வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?

வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?

வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?
எடுத்த காரியம் வெற்றி பெற…
தோல்வியைவிட வெற்றியைத்தான் அனைவரும் நேசிக்கிறார்கள். கார ணம் தோல்வியுற்றால், நமக்கு
கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல்போகும். அல்ல‍து சமூகத்தில் நமக்கு ஒரு அந்தஸ்து கிடைக்காமல்போகும். குடும் பத்தில் உள்ள‍வர்கள் அக்க‍ம்பக்க‍த்தில் உள்ள‍வர்க ள் என பலரதுகேலிப்பேச்சுக்கு ஆளாகநேரிடும். இ தே வெற்றிபெற்றால், அதன்மூலம் பணமும் கிடை க்கும் அதே நேரத்தில் குடும்பம் மட்டும்மல்ல‍ ஊரே இந்த உலகமே நம்மை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் என்பதால்தான்.
வெற்றியை எப்ப‍டி நாம் நேசிக்கிறோமோ அதேபோல் தோல்வியையும் நேசிக்க‍க் கற்றுக் கொள்ள‍ வேண்டும்.
வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இ ருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக்கொண்டி ருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலைதொட ங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையி ல், காரியத்தில் வெற்றிபெற ஒரே தாரக மந்திரம் தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொன் றாக அறிந்துகொள்ளலா ம்  இனி.
*எண்ணித் துணிக கருமம் என்றுகூறியிருக் கிறார்கள் மூதாதையர்கள். ‘சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத்தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்’ எனக் கூறுகிறார் இங்கிலாந்து மேதை பிரியாண் ட். விஞ்ஞானி ஐன்ஸ்டினோ, ஆழ்ந்த சிந்த னைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார்.
சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதி க்கும்முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்ப டாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்தி க்கவும், லாபம் போல நட்டத்தை சமாளிக் கவும் மனோதைரியத்தை வர வழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டு ம்.
*துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண் டாமா? என்றுமுடிவெடுப்பதற்கு எவ்வள வு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக் கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறுமுயற்சியாக முன்னோ க்கியே அடியெடுத்து வைக்க வேண்டும்.
* புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப் பர், பலசரக்கு வியாபாரம் முதல்பங்குச்சந்தை, தகவல் தொழில்நுட்பம்வரை எல்லாம்போட்டிதான்.
பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒருபந்தயக்குதிரை என்று எண்ணவேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட் டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்தவேண்டும். போட்டியாளருக் கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்கவேண்டும். தரமானபொரு ட்களை வழங்க வேண்டும்.

*தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட் பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண் டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையு ம், மாற்றத்தையும் யூகித்து அறிந்துசெயல்பட் டால் வெற்றி கைகூடும்.
காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இட த்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும்.
* நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெய ரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மை ப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொ க்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்விகளை அசைபோட் டு அனுபவப்பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள்.
*பயத்தை கைவிடுவதே வெற்றிப்பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது.தடங்கல்களைக்கண்டு தயங்கிநிற்ககூடா து. ஒருமேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண் டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியா பாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமா கப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்.

*சாதனைக்கு எல்லைகிடையாது.சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடைïறுகள் வந்தாலும் முயற்சியை இடை யில் விடக்கூடாது. ‘கிடைத்ததுபோதும்’ என் று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரிய த்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...