Tuesday, August 23, 2022

கடவுள் இருக்கிறாரா எனத் தெரியவில்லை எனக்கு..

 ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவும் விபத்தைச் சந்திக்க.. பொருளாதார நிலை

படு பாதாளத்தில்..
மனைவியின் நகைகளை எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே வங்கியில் வேலை செய்யும் நண்பனின் வீடு சென்று..
"சுந்தர்! இதுல 20 பவுன்கிட்ட இருக்கு..உன் பேங்க்ல அடமானம் வச்சுக்கொடு ப்ளீஸ்..
சாயங்காலம் வந்து பணத்தை வாங்கிக்கிறேன் .."
கொடுத்து விட்டு வீடடைந்தால்
வாசலிலேயே மனைவி..
"இப்பதாங்க பார்த்தேன்..நீங்க கொண்டு போனது போன தடவ அடமானம் வச்சசப்ப வாங்கிக் கொடுத்த கவரிங் நகை.. வீட்டுல இருக்குறதுதான் தங்க நகை.. "
"ஐயையோ.. ஒரு நிமிஷம் இரு"
உடனே சுந்தரை கைபேசியில் அழைத்தேன்..
"ஹலோ" -சுந்தர்
"டேய்..! இப்ப உன்ட்ட நகை அடகு வைக்கிறதுக்கு கொடுத்தேனே.. "-நான்
"நகையா? எந்த நகை? எப்ப குடுத்த? "-சுந்தர்
"என்னடா இப்டிச் சொல்ற?"-நான்
"ஏதாவது கனவு கினவு கண்டியா.. பேங்குக்கு கெளம்பணும்.. டைம் வேஸ்ட் பண்ணாத" என்றபடி அழைப்பைத் துண்டித்தான்!!
கடவுள் இருக்கிறார்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...