Thursday, August 25, 2022

கந்து வட்டி கொடுமையால் அவதிப்படுகிறீர்களா? தப்பிக்க இதோ வழிகாட்டுகிறது சட்டம்.

 கந்துவட்டி கும்பல் கொடுமையால் வாழ்க்கையை இழக்கும் மக்கள், அவர்களிடமிருந்து தப்பிக்க அது தொடர்பான சட்டத்தை அறிந்து கொள்வது அவசியம்.


கோவை மாவட்டத்தில், வெற்று பேப்பர் மற்றும் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கந்து வட்டி வசூலிக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறைக்கு அதிகளவில் புகார் வந்தது.எஸ்.பி., உத்தரவின் பேரில், மதுக்கரை பகுதியில், கந்து வட்டி வசூலித்தவர்களின் வீடுகளில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், லட்சக்கணக்கில் பணம் மற்றும்ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கந்துவட்டி வசூலிப்பவர்கள் பற்றி, தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்தனர். கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவிப்பவர்கள், அச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, போலீசில் புகார் அளிக்கலாம்.

அதிக வட்டி வசூலிப்பதை தடுக்க, தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடை சட்டம், 2003ல் கொண்டு வரப்பட்டது. கடனை வசூலிக்க அடியாட்களை ஏவி விட்டு மிரட்டுதல், தாக்குதல் நடத்தவதால், கடன் பெற்றவர்கள் அதற்கு பயந்து, தற்கொலை செய்வது அதிகரித்தது. இதை தடுக்க அதீத வட்டி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி தினசரி வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான பெயர்களில், வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம்.

இச்சட்டம் குறித்து, கோவை வக்கீல் முனைவர் ஆர்.சண்முகம் கூறியதாவது: கடன் கொடுத்தவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பணத்தை பெற்றவரிடம் திருப்பி வாங்க மறுத்தாலோ, அல்லது அதிக வட்டி வசூலித்தாலோ, கடன் கொடுத்தவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில், நேரடியாக புகார் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்ற உத்தரவுப்படி, அரசால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில், பணத்தை திரும்ப செலுத்தலாம்.


latest tamil news



கடன் வாங்கியவர், பணத்தை திருப்பி செலுத்தும் போது, பணத்தை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கடன் வழங்கியவர் கொடுக்க வேண்டும்.கடன் பெற்றவரிடம் வெற்று பேப்பர் மற்றும் 'பிளாங்க் செக்கில்' கையெழுத்து வாங்குவது, பச்சை காகிதத்தில் கையெழுத்து பெறுவது செல்லாது. மீறினால், அதிகபட்சம் ஆறு மாதம் சிறை தண்டனை கிடைக்கும்.கடனுக்காக சொத்தை மிரட்டி எழுதி வாங்கியிருந்தால், அதை நீதிமன்றம் வாயிலாக ரத்து செய்ய சட்டத்தில் இடமுள்ளது.

அதீத வட்டி வசூலிப்போருக்கு, மூன்றாண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமுள்ளது.அதீத வட்டி கொடுமையால், யாராவது தற்கொலை செய்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, தற்கொலைக்கு துாண்டிய குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.

கடன் வழங்கும் தொழில் செய்வோர், தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது புகார் அளிக்கலாம். இவ்வாறு, வக்கீல் சண்முகம் கூறினார்.

முகவரி முக்கியம்!

''யாரிடம் கடன் பெறுகிறோமோ அவரது முழு முகவரி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். முகவரி வாங்க மறந்தால், கடன் கொடுத்தவர், மூன்றாவது நபரை வைத்து மிரட்டி கந்து வட்டி வசூலிக்கும் போது, கடன் கொடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்,'' என்கிறார் வக்கீல் சண்முகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...