Thursday, August 25, 2022

கோணம் .......

ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால்

ஒரு வழியாக அது முடிவுக்கு வருகிறதே என்று தைரியமாக இருங்கள்..
நம்மைப் பற்றித் தவறான எண்ணம் உள்ளவர்களிடம்....
நாம் எவ்வளவு நியாயப்படுத்திப் பேசினாலும் அது எடுபடப்போவது இல்லை....
ஆதலால்,மௌனமே சிறந்த பதில்....
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.... வழியாய் எடுத்துக் கொள்ளுங்கள்..... வாழ்க்கை சிறக்கும்....!!!!
சில நேரத்தில் அனுசரித்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள் ... இல்லையென்றால் பல நேரத்தில் அவஸத்தைப்படத் தயாராகிக் கொள்ளுங்கள்...
யாரையும் பார்த்து பெரிதாக பிரமிக்காதீர்கள் ... பிரமித்தால் நீங்கள் பின்னடைந்து போய் விடுவீர்கள்..!
அடுத்தவர்கள் போல வாழ ஆசைப்படாதீர்கள்... ஒட்டு மொத்த அமைதியையும் இழந்திடுவீர்கள்...
யாரோடும் உங்களை ஒப்பிடாதீர்கள்... அப்புறம் உங்களையே உங்களுக்குப் பிடிக்காமல் போய் விடும்..!
யார் விமர்சனத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ..... அப்புறம் நீங்கள் உங்களுக்காக வாழவே முடியாது..!
யதார்த்தமாக வாழப் பழகுங்கள்... வாழ்க்கையை ஈசியாக்கி விடலாம்...
*மகிழ்ச்சி, நம்பிக்கை, வெற்றி மற்றும் அன்பின் விதைகளை நடவு செய்யுங்கள்... இவை அனைத்தும் உங்களிடத்தில் ஏராளமாக திரும்பி வரும்... இது இயற்கையின் விதி...
பெற்றோர்களின் அருமை தெரியவேண்டுமென்றால் சொந்தக்காரர்களோடு தங்கிப் பாருங்கள்... சொந்தக்காரர்களின் அருமை தெரிய வேண்டுமென்றால் ... காசு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள்...
தயங்கிக் கொண்டே நிற்காதீர்... மீண்டும் முயற்சி செய்து விடுங்கள்... வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்.. தோல்வியானால் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ளுங்கள்... முயன்றால் எதுவும் முடியும்...
நிராகரிப்புக்களை கடந்தால் தான் வரவேற்புகள் கிடைக்கும் ..!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...