Sunday, August 28, 2022

அது எப்படி முடியும்?

 #எவ்வளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு...!

#சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்...!
#ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான். "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று...!
#கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்க...!
#அவன் ஓடிப் போய் - ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்...!
#சுவாமி கேட்டார் - நான் தண்ணீர்தானே கேட்டேன். எதற்கு இந்தச் செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?...!
#குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்...!
#இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்...!
#ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது...!
#ஆலயமே ஆண்டவனாகாது...!
❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...