Wednesday, August 24, 2022

குதிரை வண்டி பயணம் ..

 ஒரு காலத்தில் புற நகரிலிருந்து நகரத்திற்குச் செல்ல போக்குவரத்து சாதனமாக இருந்தது இந்த குதிரை வண்டி பயணம் தான் .

எனக்கு ஞாபகம் தெரிந்து சில வருடங்கள் குதிரை வண்டியில் சென்றிருக்கிறேன். எழுபதுகளின் கடைசி எண்பதுகளின் ஆரம்பம் என நினைக்கிறேன்.
ரோட்டில் பயணிக்கும் பொழுது குதிரை லாடங்களின் சத்தம் ஒரு குதூகலத்தை கொடுக்கும் .
இந்த குதூகலத்தை அனுபவித்த கடைசி தலைமுறை நாமளாகதான் இருக்கும் ..
85 களுக்கு பிறகு தமிழகத்தில் குதிரை வண்டி பயணம் இல்லாமலே போய்விட்டது அல்லது சொந்த பயணத்திற்காக சில பேர் வைத்திருக்கிறார்கள் . ஆனால் வடநாட்டில் சில மாநிலங்களில் இந்த குதிரை வண்டி பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ..
இன்றைய தலைமுறையினர் குதிரை வண்டி பயணத்தை ரொம்பவே மிஸ் செய்து விட்டனர்..
May be an image of horse and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...