Wednesday, August 24, 2022

இந்த வார்த்தைகளை பேசுபவர்களிடம் காசு தங்கவே தங்காது! நீங்க பணம் சேர்க்க முடியாமல் போறதுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் பார்த்துக்கோங்க.

 பணம், நகை, சொத்துக்கள், செல்வங்கள் அனைத்தும் மகாலட்சுமியின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது. மகாலட்சுமியின் பொறுப்பில் இருக்கும் இவை அத்தனையும் ஒரு மனிதனுக்கு தடை இல்லாமல் கிடைக்க உழைப்பு தேவை. உழைப்பே ஒரு மனிதனுக்கு உயர்வை கொடுக்கிறது. ஆனால் சிலர் என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் அவர்களிடம் நகை, சொத்துக்கள், பணம், செல்வங்கள் எல்லாம் சேராமல் போவதற்கு காரணம் அவர்களுடைய பேச்சில் இந்த வார்த்தைகள் இருப்பது தான் என்கிறது ஆன்மீகம். அப்படியான வார்த்தைகள் என்னென்ன? அவர்களிடம் பணம் தங்காமல் போவதற்கு காரணம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். நியாயமான முறையில் பணம் சம்பாதித்தாலும், அதை தக்க வைத்துக் கொள்வதற்கு மற்றும் மென்மேலும் பெருக்குவதற்கு மகாலட்சுமியின் அருள் தேவை. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமி எல்லா இடங்களிலும் நிரந்தரமாக தங்குவது கிடையாது. பணம் என்பதே நிரந்தரமான ஒரு பொருள் அல்ல! இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை வேறு ஒருவருடைய கைகளில் இருக்கும். அதே போல மகாலட்சுமியும் அவளுக்கு பிடித்தமான இடத்தில் மட்டுமே நிலையாக நிற்கின்றாள். நிலையில்லாத ஒன்றை நிலை பெற செய்வதற்கு பிராப்தம் இருக்க வேண்டும்.  இந்த பிராப்தத்தை கொடுக்கக் கூடியது மகாலட்சுமியின் அருள் ஆகும். ஒருவர் தகாத வார்த்தைகள் பேசும் பொழுது அவர்களிடத்தில் பணம், காசு என்பது வீண் விரயம் ஆகும். பணம் செலவாகி கொண்டே இருக்கும் ஒருபுறம் வரவு எவ்வளவு வந்தாலும், அதற்கு ஏற்ப செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். இத்தகையவர்களுக்கு நண்பர்கள் வட்டம் அதிகமாக இருந்தாலும், அதில் மறைமுக எதிரிகளே வலுவாக இருப்பார்கள். எதிரிகளை கூடவே வைத்திருப்பது என்பது என்றேனும் ஒரு நாள் ஆபத்தை கொடுக்கும். கெட்ட வார்த்தைகள் பேசுவது, தாயை பழிப்பது அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகித்து பேசுவது, கெட்ட வார்த்தை பேசும் பொழுது எப்போதும் நல்லவர்களை குறை கூற கூடாது. அது போல சனியனே என்று திட்டுவது ரொம்ப பெரிய பாவ செயலாகும். சனி பகவானுடைய சாபத்திற்கு ஆளானவர்கள் இது போல வார்த்தைகளை பிரயோகிப்பது உண்டு. சனி கிரகம் நம்மை பீடிக்க இந்த வார்த்தைகளும் காரணமாக இருக்கின்றது எனவே பேசும் வார்த்தையில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். மூதேவி என்பதும் மிகப்பெரிய பாவமான வார்த்தையாகும். ஸ்ரீதேவி என்பதற்கு எதிராக இருக்கும் இந்த மூதேவி என்பது தரித்திரத்தை குறிக்கிறது. மேலும் துர் சக்திகளின் ஆற்றல் அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எனவே இந்த வார்த்தையையும் பிரயோகப்படுத்தக் கூடாது. பெற்ற குழந்தைகளை பார்த்தே தாய் ஆனவள், நீ எல்லாம் உருப்படவே மாட்ட என்று சபிப்பதும் கூடாது. அய்யய்யோ என்கிற சொல்லும் அடிக்கடி சொல்லக்கூடாது. ஐயோ என்பது எமதர்மராஜனின் மனைவியின் பெயரை குறிக்கிறது. எனவே இந்த சொல்லை சொல்லும் பொழுது யம பயம் வரக்கூடும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் நீடிக்கும். கெட்ட வார்த்தைகளை பேசுவது என்பது செல்வ சேர்க்கையை தடை செய்யும். நம்மை நேர் வழியில் இது சிந்திக்கவும் விடாது. குடும்பத்தில் சண்டையும் பெருகும். கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது மற்றும் மேற்கூறிய இந்த சொற்களை உபயோகிப்பது போன்றவை பணம் சேர்வதை தடை செய்கிறது என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...