Monday, August 22, 2022

இது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி உலாவரும் செவிவழிக்கதை.

 நிலவுக்கு செல்ல அவரும், பஸ் ஆல்ட்ரினும் அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி எடுத்தார்கள். அங்கே வசித்துவரும் பூர்வகுடி செவ்விந்திய பெரியவர் ஒருவரை சந்தித்தார்கள். "நிலவுக்கு போகபோகிறோம்" என சொன்னார்கள்.

அவர் ஒரு ஐந்து நிமிடம் யோசித்தார். அதன்பின் "எங்கள் முன்னோர்கள் ஆன்மா நிலவில் இருப்பதாக நம்புகிறோம். அதுவும் எங்கள் பூர்வகுடி நிலத்தின் ஒரு பகுதிதான்" என்றார். அதன்பின் "நிலவில் எங்கள் முன்னோரை சந்தித்தால் ஒரு செய்தியை சொல்லமுடியுமா?" என கேட்டார்.
"சரி சொல்லுங்க" என்றதும் தம் பூர்வகுடி மொழியில் சில சொற்களை சொன்னார். அதை அவர்களை திருப்பி, திருப்பி சொல்ல வைத்தார். அவர்கள் மனப்பாடம் செய்துகொண்டதும் "இதன் பொருள் என்ன?" என அவரிடம் கேட்டார்கள். "அது எங்களுக்கும் எங்கள் மூன்னோர்களுக்கும் மட்டுமே தெரிந்த பூர்வகுடி ரகசியம். நீங்கள் நிலவில் இறங்கியதும் அவர்களிடம் சொல்லிவிடுங்கள்" என சொல்லிவிட்டு போய்விட்டார்..
இவர்களும் நிலவுக்கு போனார்கள். வந்தார்கள். வந்து பல ஆண்டுகள் கழித்து நாசா விஞ்ஞானிகளிடம் யதேச்சையாக இதை சொன்னார்கள்.
விஞ்ஞானி ஒருவருக்கு அந்த செய்தியில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பதை அறிய ஆவல். அவர்களும் எழுதி வைத்திருந்த செய்தியை அவரிடம் கொடுத்தார்கள். பூர்வகுடி மொழியியல் பேராச்ரியர் ஒருவரை அணுகி "இதில் என்ன எழுதியுள்ளது" என சொல்லுங்கள் என கேட்டார்கள்.
அவர் அதை படித்ததும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்பின் இதில் எழுதியிருப்பது என்னவெனில்
"நாங்கள் பூமியில் உங்கள் பூர்வகுடி நிலங்களை எல்லாம் பிடித்து அவர்களை அழித்துவிட்டோம். இப்போது நிலவை பிடித்து உங்களையும் அழிக்க வந்திருக்கிறோம். உடனே தப்பித்து ஓடிவிடுங்கள்" என அதில் எழுதியிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...