Monday, August 29, 2022

ஏழை மனநிறைவோடு வாழ்கிறான்...

 பணக்காரருக்கு பாடம் புகட்டிய ஏழை..காசு, பணம் இருந்தால் மட்டும் போதுமா...? நிறைவான வாழ்வு வேண்டாமா...!? அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை என்றாலும் ஏழை மனநிறைவோடு வாழ்கிறான்...

போதும் என்ற மனதுடன் வாழ்பவர் மட்டுமே இந்த உலகில் நிறைவாக வாழ்கிறார். இருப்பவருக்கு கொடுக்க மனமில்லை. இல்லாதவர்களுக்கு உதவும் எண்ணம் அதிகமாக உள்ளது ...
ஒரு வசதியான செல்வந்தரது வீட்டின் அருகே சிறிய குடிசை வீடு. அங்கு காளிமுத்து மற்றும் இலட்சுமி என்ற கணவன் மனைவியும் மற்றும் ஒரு குழந்தையும் வசித்து வந்தார்கள்...
ஒருநாள் காளிமுத்து ஒரு குடம் தண்ணீர் கேட்க செல்வந்தர் வீட்டிற்க்குச் சென்றார். அங்கே!, அந்தப் பணக்காரர் அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார்...
அப்பொழுது, ஐயா ! ஐயா ! என்று அழைத்தார் அந்த ஏழை காளிமுத்து. பின்பு, சிறிது நேரம் கழித்து உனக்கு என்ன வேணும்?என்று கேட்டார்...
ஐயா! ,ஒரு குடம் தண்ணீர் வேண்டும் என்றார். நீ யார்?, உன் வீடு எங்கு
இருக்கிறது...? என்றார். ஐயா, வீடு இல்லை ஒரு சாதராண குடிசை...
உன் வீடு எங்கே இருக்கின்றது!?, என் வீடு எங்கே இருக்கின்றது!, .நீ வந்து இங்கு தண்ணிர் கேட்கலாமா...? தண்ணீர் எல்லாம் இங்கே இல்லை. நீ போகலாம் என்று பணக்காரர் திமிராக ஒருமையில் பேசினார்...
சரிங்க ஐயா என்று வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு அவர் குடிசைக்கு வந்தார் காளிமுத்து...
பின்பு!, சில நாட்களுக்குப் பிறகு ,அந்த வழியாக காளிமுத்து போய்க்கொண்டிருந்த போது, அந்தப் பணக்காரர் பயங்கர கோபத்துடன் கத்தி அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தார்...
அவரது மகன் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சைக்கு குருதி தேவைப்படுகிறது. ஆனால்!, அவருடைய நண்பர்கள் குருதியளிக்க யாரும் முன்வராததால் அலைபேசியில் கோபமாக பேசிக் கொண்டு இருந்தார்...
இவர் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காளிமுத்து அவரிடம் பேசச் சென்றார்...
ஐயா! என்று அழைத்தார். அவர் நீயா தண்ணீர் தானே உனக்கு வேணும்.. எடுத்துட்டு போ. என்று கோபத்துடன் சொன்னார்..
மறுபடியும் ஐயா! என்று அழைத்தார். ஆனால்!, சிறிதும் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டே இருந்தார். மீண்டும் ஐயா!, என்று அழைத்தார். தண்ணீர் தானே வேண்டும் உனக்கு ..? .அந்தத் தொட்டி முழுவதும் எடுத்துக் கொண்டு செல், என்று தொடர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார்.
பிறகு, ஐயா நீங்க கேட்ட குருதி எம்மிடம் இருக்கிறது என்று பலமாகக் கத்தினார். அப்போது தான் அந்தப் பணக்காரார் இவரை ஏறெடுத்துப் பார்த்தார்...
பின்பு சாந்தமாக, என்னை மன்னித்து விடுப்பா!, நீங்கள் தண்ணீர் கேட்கத்தான் வந்திருப்பீர்களென்று நினைத்தேன்...!
வாருங்கள் மருத்துவமனைக்குப் போலாம். அங்கு, காளிமுத்து சென்று குருதி கொடுத்தப் பிறகு சிகிச்சை தொடங்கி
அந்த செல்வந்தர் மகனைக் காப்பாற்றி விட்டார்...
பின்பு, காளிமுத்து பணக்காரனிடம் பேச வந்தார். ஐயா என்று அழைத்த காளிமுத்துவைப் பார்த்து என்னை மன்னித்து விடப்பா...!
உங்களை நான் மனதளவில், மிகவும் காயப்படுத்தி இருக்கிறேன் என்று திடீரென்று காலில் விழுந்தார் அந்த செல்வந்தர்...
பின்பு, ஐயா, நீங்கள் போய் இதெல்லாம் செய்யலாமா...? ஐயா!, ,நாங்கள் ஏழைகள் தான். ஆனால்!, மனிதாபிமானம் அற்றவர் அல்ல. எங்களிடம் பணமில்லாமல் இருக்கலாம். ஆனால்!, எங்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கிறது என்றார்...
பல கோடிக்கு வாகனத்தை வாங்கினாலும் சாலையில் தான் நிறுத்த முடியும் வீட்டிற்குள்ளேயா நிறுத்த முடியும்....!
பல ஆயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கியதைக் காலில் தான் போட முடியும். தலை மேல வைக்க முடியாது...ஒரு அறை முழுவதும் பணம் வைத்திருக்கலாம், ஆனால்!, குருதி தேவைப்படும் போது பணத்தை அரைத்து ஏற்றிக் கொள்ள முடியாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...