Thursday, August 25, 2022

நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம்.

 நம் பூர்வ வினைகளை ஸ்ரீமந் நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம் நம் பக்த பிரகாலாதன் போல......... விளக்கும் எளிய கதை

🌺🌹ஒரு குழந்தை கர்ப்பத்தில்
உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.
🌺(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.
🌺(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது. தங்காது...
🌺(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
🌺(4) கர்மா: தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான்.
இன்ன தொழில் செய்து தான்
இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம்.
🌺பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
🌺(5) மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது.
🌺அதை யாரும் மாற்றமுடியாது.
யாராலும் மாற்றமுடியாது.
ஒரு நோயாளியை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார்.
🌺அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.
🌺ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில்
இருக்கும் போதே பூர்வ வினைக்கு
ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.
🌺நம் பூர்வ வினைகளை ஸ்ரீ மந் நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம் நம் பக்த பிரகாலாதன் போல.
🙏சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...