நேற்றிரவு சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் #TheKeralaStory திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்தேன். அங்கு பார்த்த காட்சிகள் என்னை மெய்சிலிர்க்க வைத்ததுடன், தமிழகத்தின் எதிர்காலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
1. படத்தில் ஒரு தருணத்தில் மதம் மாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண் தன் கம்யூனிஸ்ட் தந்தையை பார்த்து "சிறுவயதில் இருந்து அந்நிய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை எங்களுக்கு சொல்லிக்கொடுத்த நீங்கள், ஒரு முறையாவது நமது ஹிந்து மதம், கலாச்சாரம், பண்பாடு குறித்து சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே அப்பா??" என நாக்கை பிடுங்குவது போல் கேட்ட போது, விண்ணை பிளக்கும் அளவிற்கு கரகோஷத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.
2. படம் முடிந்த பிறகு அனைவரும் எழுந்து நின்று பலத்த கரகோஷங்களை எழுப்பினர் - Standing Ovation.
தமிழகத்தை பீடித்துள்ள போலி திராவிட பாஸிஸ்டுகளின் பிடியிலிருந்து தமிழர்கள் நிச்சயம் மீண்டு விடுவார்கள் போல. உண்மைகளை மட்டும் சமரசமின்றி உரக்க மக்களிடம் கொண்டு சென்றால் போதும். மாற்றம் தானாக நிகழும்.
மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய நம்பிக்கை பிறக்கிறது.
No comments:
Post a Comment