Tuesday, May 9, 2023

'திங் அவுட் ஆப் பாக்ஸ்' என்ற வகையை சேர்ந்த கேள்வியான "நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்?

 ஐஏஎஸ் இன்டெர்வியூவில் கேட்கபட்ட பகீர் கேள்வி!

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற சிறப்பாக படித்தால் மட்டும் போதாது. சில சாதுரியமான விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
சரியாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தவறாக போக வாய்ப்புள்ளது.
ஐஏஎஸ் என்பது கடக்க முடியாத கடல் இல்லை ஆனால் அதனை சரியாக முறையில் புரிந்து படித்தால் மட்டுமே ஐஏஎஸ் என்ற கடலை கடக்க சாத்தியப்படும்.
கடந்த கால ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட 'திங் அவுட் ஆப் பாக்ஸ்' என்ற வகையை சேர்ந்த சில கேள்விகளும் அதற்கான சுவரஸ்யமான பதில்களும் :
கேள்வி 1: நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: என் தங்கைக்கு உங்களை விட சிறந்த வாழ்க்கை துணை வேறு யாராக இருக்க முடியும்.
கேள்வி 2: ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால் உடையவில்லை ஏன்?
பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
கேள்வி 3: பாதி ஆப்பிள் போல் இருப்பது?
பதில்: இன்னொரு பாதி ....
கேள்வி 4: 5+5+5=550? ஒரே ஒரு நேர்கோடு மட்டும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் விடை 550 வர வேண்டும்.
பதில்: 5 ஆம் எண்ணின் பக்கத்தில் உள்ள + குறியீட்டில் சாய்வாக ஒரு கோடு போடப்படுகிறது. இதன் பின் +சிம்பிள் 4ஆக மாற்றப்படுகிறது. விடை 545+5=550?
கேள்வி 5: ராமன் தன்னுடைய முதல் தீபாவளியை எங்கு கொண்டாடினார்?
பதில்: இந்த கேள்வி ஏற்கனவே யூபிஎஸ்சியில் கேட்கப்பட்டதுதான்.
நரகாசுரனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகின்றோம் இல்லையா? நரகாசுரனை கொன்றது யார்? கிருஷ்ணன். ஆக கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம் எடுக்கப்பட்டது. எனவே ராமரருடைய காலத்தில் தீபாவளி இல்லை. சிம்பிள்.
கேள்வி 6 : செவன் ஈவன் நெம்பர் சொல்லுங்கன்னு கேட்ட கேள்விக்கு
பதில்: சிம்பிள் சார் செவன்ல இருந்து 'எஸ்' ரிமூவ் பண்ணா ஈவன் நம்பர் கிடைத்து விடும்.
கேள்வி7: தொடர்ந்து வரும் மூன்று நாட்களை அவற்றின் பெயர்களின்றி எவ்வாறு சுட்டிக்காட்டுவீர்கள்?
மூன்று நாட்கள் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டும். ஆனால் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரக்கூடாது?
பதில்: நேற்று, இன்று, நாளை!
கேள்வி 8: 1918 ஆம் ஆண்டில் முடிவு என்ன?
பதில்: 1918 ஆம் ஆண்டின் முடிவு 1919 ஆண்டு தொடக்கம்.
கேள்வி 9: ஒரு மனிதன் 8 நாட்கள் தூங்காமல் வேலை செய்ய முடியுமா?
பதில்: முடியும் இரவில் தூங்கி கொள்ளலாம்.
கேள்வி10: உங்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி காட்டுகிறார் என்ன செய்வீர்கள்?
பதில்: அந்த துப்பாக்கியை பார்ப்பேன் ,புடிச்சிருந்தா வாங்குவேன். புடிக்கலைன்னா சாரி சொல்லி நான் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிருவேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...