இன்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கும் போது நாம் கண்ட காட்சிகள் சில...


அரசு வழங்குவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்தானே தவிர பொங்கல் பண்டிகை தொகுப்பு இல்லை.
ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுப்பதில் என்னவாகிவிடபோகிறது. கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற ரீதியில் தகுதியில்லாத எல்லோரும் விண்ணபித்தால். இத்திட்டத்திற்காக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாட்களுக்கு பணிச்சுமை கூடும்.
அதிக விண்ணப்பங்கள் குவியும் போது பணியாட்கள் சலிப்படைந்து ஏனோதானோ என்ற ரீதியில் பயனாளர்களை தேர்வுச் செய்யலாம், இல்லை அலட்சியமாக விண்ணப்பங்கள் சிலவற்றைத் தூக்கி குப்பையில் எறியலாம். இதனால் உண்மையிலயே தகுதியானவர்கள் கூட பாதிக்கப்படலாம்.
திட்டத்தின் விதிமுறைகளைத் தெரிந்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பபிபது எல்லோருக்கும் நல்லது.
No comments:
Post a Comment