Sunday, July 16, 2023

மாவீரன்.

 சிவகார்த்திகேயனின் எதார்த்தமான முக பாவங்களும், டைமிங்கும், பளிச் பஞ்ச்களும், ரசிக்கவைக்கும் உடல் மொழியும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், படிப்படியான வளர்ச்சியும், பந்தா தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளும் நிதானமும் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த எல்லா படங்களும் பார்த்துவிடுவேன்.

ரிலீஸ் அன்றே பார்த்தது நேற்று முதல் முறை.
அதிகப்படியான எதிர்பார்ப்புகளுடன் போகும்போது அந்த எதிர்பார்ப்புகள் காரணமாகவே சிறப்பான படம்கூட கொஞ்சம் குறைவாகத் தோன்றும். ஆனால்.. மாவீரன் ஏமாற்றவில்லை.
கன்னித் தீவு மாதிரி ஸ்ட்ரிப் கார்ட்டூன் தொடர் வரையும் ஹீரோ என்கிற பின்னணியே புதுசு. அட போட வைக்கிறது.
வரையும் கதையில் ஹீரோ பல சாகசங்கள் செய்தாலும் நிஜத்தில் அநியாயத்திற்குக் கோழை என்கிற பாத்திர வடிவமைப்பிலேயே சுவாரசியம் இருக்கிறது. அது சரியான சைசில் வாங்கிய ஷூ போல சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
ஒரு விபத்தில் ஹீரோவுக்குக் கிடைக்கும் வினோத குரல் உத்தரவுகள் மூலம் கிச்சுக்கிச்சு மூட்டாத குறையாக சிரிக்கவைக்கிறார்கள்.
இப்படி சமீபத்தில் எந்தப் படத்தில் வாய்விட்டுச் சிரித்தோம் என்று யோசித்தேன். நினைவுக்கு வரவில்லை.
இடைவேளை வரைக்கும் இந்த நகைச்சுவை கலாட்டாவில் மூழ்கடித்துவிட்டு..
பிறகுதான்..பிறகுதான்.. வேறு டைரக்டர் மாறிவிட்டாரா என்று சந்தேகப்படும்படியாக திரைக்கதை சரிவுப்பாதையில் போகும் பிரேக் பிடிக்காத சைக்கிளாக சரிகிறது.
பார்த்துப் பழகிய, உப்புச்சப்பு இல்லாத கிளைமாக்சுடன் அனுப்பிவைக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரிதா, கோமாளி அரசியல்வாதியாக மிஷ்கின், துணை நடிகர்களில் ஒருவர் போல வந்து போகும் கதாநாயகி அதிதி, சில படங்களுக்குப் பிறகு வரிக்கு வரி சிரிக்க வைக்கும் யோகிபாபு என்று இத்தனைப் பேர் வந்தாலும்...இது சிவாவின் ஒன் மேன் ஷோ!
முழு படமும் காமெடியாகவே போயிருக்கலாம். நடுநடுவில் செண்ட்டிமெண்ட் இந்தப் படத்திற்கு இடறுகிறது.
தேவைப்படும்போது ஹீரோவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மக்கள் மாறிக்கொண்டே இருக்கும் எமோஷனல் லாஜிக் மீறல்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஜாலியாக சிரிக்க முடியும்.
இயக்குனர் மடோனா அஸ்வின் மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..
May be an image of 5 people and text
reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...