Sunday, July 23, 2023

இது, 1995-ல் நடந்த சம்பவம்.

 

நான் அந்த நேரத்தில் திருப்பதியில் வேலை செய்து கொண்டிருந்தேன். எங்களுடைய திருமலைக் கிளையில் அலுவலக வேலை இருந்தது. வேலை முடிந்ததும், கிளை மேலாளருடன் ஏழுமலையானைச் சேவிக்கச் சென்றேன்.

அப்போது, எங்கள் திருமலைக் கிளை மேலாளர் என்னிடம் சொன்னார்:

"பெருமாளின் கண்கள் அங்குமிங்கும் அசைவதைப் பார்த்தீர்களா? உலகத்திலேயே இவர் ஒருத்தர் தான் பகவான். இவரைப் போல வேறெங்குமே பார்க்க முடியாது".

நான் ஒன்றும் பேசவில்லை. தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.

வங்கிக் கிளைக்கு மீண்டோம். நான் அங்கே இருந்த ஒரு சிறு காகிதத்தில் இப்படி எழுதி, எங்கள் மேலாளரிடம் தந்தேன்.

"இங்கிருப்பது வேறெங்கும் இல்லை என்றால்,

இங்கே இருப்பது எங்கும் இருக்கிறது என்னும் கூற்று,

பொய் என்றல்லவோ ஆகி விடும்?"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...