Sunday, July 23, 2023

மழைக்கு ஒதுங்கக்கூடாது.

 திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது

திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும்
காரணம் இது...
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ,இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன்
மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான்.
அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத்தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள்
நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை
திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம்ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு
நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரிமந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படிதிருவண்ணாமலையில் காயத்ரிமந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம்
வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழைபொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள்அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.
அப்படிப்பட்டபூமாதேவியைச் சாந்தப்படுத்தஇப்படிப்பட்ட மழை பொழியுமாம்.
இந்தமழைப்பொழிவுஇறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத்துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே
இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ,அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்.
விவசாயம் செழித்து வளரும்.
அமைதிநிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத
புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம்தோன்றும்.
மழைத் துளிகள் கனமாக விழவே, பாறைஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி.
எனினும், விடாமல் காயத்ரி மந்திரம்ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத்துளிபாறையில் பட்டு, அதில்அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும்
அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும்
பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில்அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.
அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள்
இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம்
சொல்லி, அந்த மூலிகையைப் பறித்தசித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்
லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள்.
அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்கஇருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக்
கொண்டாள் லீலாவதி. அதனால் அந்தமூலிகையின் சக்தி கருவை அடைந்தது.
அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின்
உக்கிரத்தைத் தாங்கும் சக்தியைபிரகலாதனுக்கு வழங்கியது.
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போதுஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால்நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம்.
மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள்ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம்பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும்என்பது விதி.
May be an image of temple and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...