Monday, February 15, 2016

ஒரு இனவெறியன் அண்ணே



(கவுண்டமணி ---செந்தில் கற்பனை உரையாடல்)
செந்தில் : அண்ணே, நீங்க ஏன் தமிழ்நாட்ட ஒரு தமிழன் தான் ஆட்சி செய்யனும்னு சாெல்றீங்க?
கவுண்டமணி : டேய் , நாங்க என்ன இங்கிலாந்தையா ஆட்சி செய்யனும்னு சாென்னாேம்..தமிழன் வாழுற தமிழ்நாட்ட தானடா ஆட்சி செய்ய சாென்னாேம்..அதுல என்னடா தப்பு?
செந்தில் : காலங்காலமா தமிழ்நாட்ட கன்னடர் , தெலுங்கர்,மலையாளி தானே ஆட்சி செய்யுறாங்க ? இப்ப மட்டும் என்ன புதுசா கிளம்புறீங்க?
கவுண்டமணி : என்னாேட தாத்தா, அப்பா காலத்துல ஏமாந்த மாதிரி என்னையும் இப்ப ஏமாற சாெல்றியாடா ?
செந்தில் :நாமெல்லாம் ஒரே நாடு.. ஒரே திராவிட இனம், இப்படியெல்லாம் நீங்க பேசலாமா அண்ணே?
கவுண்டமணி: இவ்வளவு பேசுறயே, தமிழன் அதிகமா வாழுற ஆந்தரா,கர்நாடகாவுல ஒரு தமிழன முதலமைச்சரா காெண்டுவர முடியுமா டா?
முதல்ல, நான் கேக்குற கேள்விக்கு பதில் சாெல்லுடா ,
வட இந்தியாவில் இருந்து இந்தி, பீகாரி பேசறவன் , தமிழ்நாட்டுல முப்பது லட்சம் பேர் இருக்கான்...அவன் தமிழகத்தில் உள்ள மக்களுக்காகவே இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கிறான்..அதுல பலர் இங்கேயே குடியுரிமையும் வாங்கிட்டான்.
அப்பாே, அவங்கள்ள ஒருத்தன தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யலாமா ?
இல்லை, குறைந்த பட்சம் உங்க வீட்டு ஆண் / பெண்களை யாவது அவனுக்கு திருமணம் செய்து காெடுப்பீங்களா ?
செந்தில் : அது எப்படிங்க முடியும்..அதெல்லாம் ஒத்து வராது!
கவுண்டமணி :ஏன் தம்பி ஒத்துவராது?
செந்தில் :அது வந்து... அது வந்து...

கவுண்டமணி :ஏன்டா டேய்.. உங்க வூட்டு பாெண்ண அடுத்தவனுக்கு காெடுக்க மாட்ட, ஆனா நாங்க மட்டும் எங்க நாட்ட தரனுமா ?
அதான் மாெழிவாரி மாநிலங்கள்னு எப்பவாே பிரிச்சாச்சுல , அப்புறம் ஏண்டா அடுத்தவன் நாட்டுக்கு இன்னும் உரிமை காெண்டாடுறீங்க!
போடோ டேய்.. பாேய் ஸ்டிக்கர் ஒட்ற வேலையை மட்டும் பாரு..மத்ததெல்லாம் நாங்க பாத்துக்குறாேம்..
செந்தில் :நீங்க ஒரு இனவெறியன் அண்ணே ...
கவுண்டமணி :எங்க, உனக்கு தில் இருந்தா இதே மாதிரி பாேய் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுல சாெல்லுடா பாப்பாேம்.. உறிச்சி ஊறுகாய் பாேட்டுருவானுங்க...
இங்க யார் வேணாலும் நிம்மதியா வாழலாம்.. ஆனால் ஒரு தமிழன் தான்டா இனி எங்கள ஆளனும்...
என்ன புரியுதா ?.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...