Monday, February 8, 2016

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி!


உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி!

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி!
பணம் எவ்வ‍ளவுதான் இருந்தாலும் வசதிகள் எவ்வ‍ளவுதான் இருந்தாலு ம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்மில் பலருக்கு கிட்டுவதே இல்லை.  என்ன‍ தான் பணத்தைக்கொண்டு
பொருட்களை வாங்கி குவித்தாலும், ஆடைகள் வாங்கி அணிந்தாலும்,  உயர்தர சாப்பாடு சாப்பிட்டாலும் கிட்டாத நிம்மதியும், மகிழ்ச்சியும் இன் னொருவருக்கு உதவும்போது அந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் தானாக நம் மை வந்தடைகின்றன• இதே ஏழை மாணவ மாணவியகளுக்கு கல்வி கிடைக்க நம்மால்முடிந்த பண உதவி செய்தாலே அதன் மூலம் நமக்கு கிடைக்கும் மனதிருப்தி அலாதியானது. அது மட்டு மல்லாது நோயினால் வாடும் ஆதரவற்ற‍வர்களுக்கு நம்மால் முடிந்தள வு மருத்துவச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்து அந்த உயிரைக் காப்பாற்றும் போதும் சரி நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.  மேலும் இதுபோன்று நீங்கள்செய்யும் அந் த உதவிகளால் புண்ணியம் உங்களுக்கு பலசேரும். இறைவனும் மனம் குளிர்ந்து உங்களுக்கு நல்லாசிகளுடன் நல் வாழ்வையும் வழங்குவார்.
உங்களால் நேரடியாக செய்ய‍முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கீழுள்ள‍ வரிகளைச் சற்றுப் பொறுமையாக படித்து உணரவும்.  
உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்)தனது 32 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் 13-03-2016 அன்று சீரும்சிறப்புமாக கொண்டாடவுள்ளது. அவ்விழாவில் உரத்த‍ சிந்தனை ஆண்டு மலரையும் வெளியிட உள்ளது.இம்மலரில் பல்வேறு படைப்பாளிகளின் சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயனுள்ள‍ குறிப்புக்கள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள், நகைச்சுவை உட்பட பற்பல பகுதிகள் இடம் பெற உள்ள‍து. மற்ற‍வர்களுக்கு உதவவேண்டு ம் என்ற மனம் உங்களிடம் இருந்தால்,   இந்த ஆண்டு மலரில் உங்களது நிறுவனத்தின் விளம்பரங்கள் இடம் பெற ஆதரவு கரம் நீட்டி நல்லதொருசேவையில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ள‍ உரத்த சிந்தனை வேண்டுகிறது.
நீங்கள் செலுத்தும் விளம்பரங்கள் அடங்கிய அந்த அற்புதமான‌ ஆண்டு மலரின் பிரதிகள் விற்பனையாகும் தொகையில் முதல் 50%   ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தொகைக்காகவும்,
மீதம் உள்ள‍ 50% புற்றுநோயாளிகளின் காப்பகமான ஸ்ரீ மாதா டிரஸ்ட் இல்ல‍த்திற்கும் நன் கொடையாக வழங்கப்படும் என்பதை பெருமிதத்து டன் தெரிவித்துக் கொள்கிறோம்.  நீங்கள் ஒரே கல்லில் மூன்று மாங்காய் கள் அடிக்க‍விருக்கிறீர்கள்?
ஆம்!
ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்
மாங்காய் 1:
உங்கள் விளம்பரங்கள்மூலம் உங்கள் வியாபாரம் பெருகும்
மாங்காய் 2:
ஏழைஎளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க‍ச்செய்த மன திருப்தி
மாங்காய் 3:
புற்றுநோயால் அவதியுறும் ஏழை நோயாளிகளின் மருத்துவச் செலவுக ளுக்கு உதவியதில் நீங்களும் ஒரு காரணம் என்ற மன மகிழ்ச்சி
ஆகவே உரத்த‍ சிந்தனை ஆண்டு மலருக்குத் தாராளமாக விளம்பரங்களை நல்கி, அதரவு தருமாறு உரத்த சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சார்பாகவும் விதை2விருட்சம் இணையம் சார்பாக அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம்.
உரத்த சிந்தனை 32ஆம் ஆண்டுமலரில் விளம்பரம் செய்ய‍ விரும்புவோர் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...