Thursday, February 18, 2016

‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
சிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து இந்த‌ வரகு என்றால் அது மிகையாகாது. இதனை
நம் முன்னோர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் திடகாத் திரமான உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் இன்று, நிலைமை தலைகீழ், நாகரீக உணவின் மீதும் நாட்ட‍ம்கொண்டு, கலப்ப‍ட  மற்றும் செயற்கை நிறப் பொடிகள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த, கெட்டுப்போன, ஆரோக்கியமற்ற‍ உணவுகளைத்தான் நாம் சாப் பிட்டு வருகிறோம். சரி நம்மை விட்டுவிடு வோம். நமது வாரிசுகளாவன் நல்ல ஆரோ க்கியமான திடகாத்திரமான உடலை பெற வேண்டாமா? அதற்கு நாம் செய்ய‍வேண்டி ய முதல்படி, நமது பாரம்பரிய உணவு முறையை குழந்தைகள் சாப்பிட பழக்க‍ வேண்டும். நமது பாரம்பரிய உணவுவகைகளில் தானிய வகைகள் சிறப்பு க் குரியதாகும். அந்த‌
இந்த வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்டாகும்  நன்மைகளை இங்கு பார்ப்போம். 

ரத்தத்தில் அதிகளவுசேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையினை அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.
நடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி , அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.
கண்களில் ஏற்படவிருகும் நரம்புநோய்க ளைத் தடுக்கும் முற்றிலும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.
கல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால், ஆரோக் கியத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும் நமது உடலில் சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீராக்குகிறது.
அதுமட்டுமல்ல‍ மாதவிடாயகோளாறுகள் அதிகளவில் பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது, இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும்
என்கிறார்கள் சித்த‍ மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...