Saturday, February 6, 2016

நண்பர்கள்...................................

தவிக்கும் பொழுதெல்லாம்,
தலைகோதும் நண்பர்கள்.
புரையேறும் பொழுதெல்லாம்
புன்னகைத்தே வருவார்கள்.
சடுகுடு காலம் முதல்,
குடுகுடு காலம் வரை,
நிற்காமல் ஓடி வரும்.
நிம்மதி கூட்டித்தரும்.
மடை யொன்றிலேதான்,
இடையாடிப் பிறந்தவரில்லை.
கடைக்கோடியில் இருந்தவர் தாம்.
உடைப்பொழுதும் உடனிருப்பர்.
தவிக்கும் பொழுதெல்லாம்,
தலைகோதும் நண்பர்கள்.
புரையேறும் பொழுதெல்லாம்
புன்னகைத்தே வருவார்கள்.
சடுகுடு காலம் முதல்,
குடுகுடு காலம் வரை,
நிற்காமல் ஓடி வரும்.
நிம்மதி கூட்டித்தரும்.
மடை யொன்றிலேதான்,
இடையாடிப் பிறந்தவரில்லை.
கடைக்கோடியில் இருந்தவர் தாம்.
உடைப்பொழுதும் உடனிருப்பர்.
எழுத்துகளில் எல்லாவற்றையும்
எழுதிவிட முடியுமென்றால்
எழுத்துக்கள் போதாது..
வலியின் ஒலிகளை
வழித்தாண்டிச் சொல்ல
வழியில்லை வரிகளுக்கு.
கண்திறப்பாய் கடைநொடியேனும்!
கடையேறுகிறேன் கண்ணீருடன்.
கண்ணுறங்கு கமலக்கண்ணா!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...