Monday, February 29, 2016

எங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.

கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் வேண்டுமென்றே நழுவ விட்டு
40 எம். பி. க்களை வைத்திருந்தும்....மத்தியிலே ஆட்சியில் பங்கிருந்தும்...ஒற்றை கல்லை கூட தூக்கி போடாத தலைவா உங்களுக்கே எங்கள் வாக்கு.




வயதான நோயாளியான அப்பாவியான பார்வதி அம்மாவை எங்கள் தலைவனின் தாய் என்ற ஒற்றை காரணத்திற்காக சிகிச்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பி கொன்றீர்களே நிச்சயமாக உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் எங்கள் இனம் கதறி கதறி ஓலமிட முக்காடு போட்டு கொண்டு முதுகு வலி நாடகமாடிய தமிழின் தலைவா உங்களுக்கு தான் எங்கள் வாக்கு.
.
எம் இனமே அழிந்து புதைந்து சாம்பலான பின் ...9க்கு 1 என கூட்டணி பேரம் பேசிய கர்ண பெருமானே உங்களுக்கே எங்கள் வாக்கு.
வாக்குறுதிகள் மறந்து போனாலும் மறக்காமல் வாக்கு கேட்டு வருவகின்ற அறிவின் சிகரமே உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
எங்கள் பெண்கள் சிதைக்கப்பட்ட பொழுதோ கொன்றபின் சிதைக்கப்பட்ட பொழுதோ எள்ளளவும் கலங்காது சோனியாவோடு கும்மி அடித்து சேர்ந்து தாளம் போட்டு எங்கள் இனத்தை கொன்ற பொழுது கலங்காத விழிகள்..கனிமொழி ஜி 2ஜி வழக்கில் கைதான பொழுது கதறி கதறி அழுதனவே.. உங்கள் ஈர விழிகளுக்கும் கனிந்த அன்புக்கும் தாய்க்கு தாயான தலைவா... உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
.எமக்காக போராடிய உறவுகளை சிறையில் அடைத்த பெரியவரே உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
இனத்தை கச்சிதமாக அழித்துமுடித்துவிட்டு...அதே இனத்தின் நலன்காக்க "காங்கிரஸின் கூட்டணியில் இருந்து விலகி"......இன்று மிச்சம் மீதி இனத்தவரையும் கருவறுக்க கை பிடித்து உலா வர துடிக்கும் நடிகர் திலகமே உங்களுக்கே எங்கள் வாக்கு.
அது சரி எதற்கு வாக்கு என யாருமே கேட்கவில்லையே? அதை எதற்கு இங்கு.. ?? நிச்சயமாக தேர்தலில் வாக்களிக்க என எவரும் மறந்தும் நினைத்து வாக்களித்து தமிழர்க்கு துரோகம் இளைத்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...