Monday, February 29, 2016

இத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் அரசலாற்றைக் கடந்தால் தெற்கே தாராசுரம் உள்ளது. இக்கோயில் மிகச்சிறந்த கலைவளம் கொண்ட கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் உயிருடன் நம்முடன் கொஞ்சுபவை.


இக்கோயிலில் உள்ள பலிபீடம் இசையொலியெழுப்பும் கல்லால் அமைந்தும் பரதத்தின் நுட்பங்களை விளக்கும் நுண்ணிய சிற்பங்களும் 63 நாயன்மார்களின் வரலாறும் சிற்பவேலைப்பாட்டின் சிகரமாக விளங்குகிறன.
இத்தலத்திற்கு புராணக்கதை ஒன்று உண்டு. அதாவது இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானை துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகி சாபத்தால் வெள்ளை நிறம் மாறி கருமையாகிறது. எனவே சாபம் நீங்க இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றது. ஆகவே ஐராவதம் வந்து வழிபட்டதால் இத்தலம் ஈஸ்வரர் ஐராவதேஸ்வரர் என்றும் இத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.
மேலும் தாரன் என்ற அரசன் என்றும் மரணமில்லாது வாழவும் தேவர்களை வெற்றிகொள்ளவும் இத்தல இறைவனை பூசித்து அருள் பெற்றான். ஆதலின் தாராசுரம் எனப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். மேலும் தாரன் அசுரனின் மகன் மேகதாரன் வைகாசி மாதத்தில் பெரும் விழா ஒன்றை இத்தலத்தில் சிவபெருமானுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...