Tuesday, February 16, 2016

குண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு...

திட்டம் போட்டு தங்கம் கடத்துபவர்களை
விட்டுவிட்டு...
திருமணத்துக்கு தங்கம் வாங்கி வருபவனை பிடித்து விசாரிப்பதும்...
குண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு...
மறதியில் குண்டூசியை எடுத்து செல்பவனை பிடித்து வைத்து விசாரணை என்கிற பெயரில் குளிர் காய்வதும்...
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s photo.
இந்திய விமான நிலையங்களில் காலம் காலமாக நிகழ்ந்து வருகிற சர்வ சாதாரண நிகழ்வுகளாக இருக்கிறது.
இதைவிட பெரிய கொடுமை என்னவெனில்...
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பயணிகளை சுமந்துக்கொண்டு பயணம் செய்யும் விமானங்களில் கூட ஹிந்தியில் அறிவிப்புகளை செய்வதும், குறிப்பாக கடலில் விமானம் விழ நேர்ந்தால் தப்பிப்பது எப்படி என அவர்கள் ஹிந்தியில் சொல்ல சொல்ல நம்ம ஆட்கள் சித்த பிரமை பிடிச்சது போல உட்கார்ந்திருப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.
தாங்கள் எதிர்பார்க்கும் லஞ்ச பணத்தை கொடுக்காத பயணிகளை சுங்க இலாக்கா அதிகாரிகள் படுத்தும்பாடு இருக்கிறதே அதை வார்த்தையால் சொல்லி மாளாது.
விமான பயணங்கள் என்பது விஐபி களுக்கு மட்டும் சுகமாய் இருந்தால் போதாது. அவர்கள் விஐபி களாக இருக்க காலம் முழுவதும் காரணமானவனாக இருக்கும் சாமான்யர்களுக்கும் சுகமானதாய் இருந்திடல் வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...