சொந்தத் தொழிலை தொடங்கினால் அதில் ஏதாவது ஒரு பிரச்சனை. வருமானம் இல்லை. லாபம் கிடைக்கவில்லை. மேலும் மேலும் நஷ்டம் உண்டாகிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நன்றாக படித்து பட்டம் வாங்கி திறமையோடு இருப்பவர்களுக்கு நல்ல வேலை நிரந்தரமாக கிடைக்கவில்லை. நல்ல சம்பளம் கிடைக்கவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீண்ட நாட்களாக ஒரே வேலையில் ஒரே பதவியில் இருக்கின்றீர்கள். உயர் பதவி தேவை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரம் சுலபமான பரிகாரம் தான். ஆனால் முழுக்க முழுக்க சக்தி வாய்ந்த பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி 21 வது நாளில் பலனை எதிர்பார்க்கலாம். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு முன்பாகவே எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். சரியாக 6.00 மணிக்கு பூஜை அறைக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு செம்பு சொம்பு நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி அதில் பனவெல்லம் போட்டு கலந்து தண்ணீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். பூஜை அறையில் அறையில் இருந்து வெளியே வந்து, கிழக்கு பக்கமாக நின்று சூரிய உதயத்தை பார்க்க வேண்டும். உங்களுடைய கையில் நீங்கள் தயார் செய்த சொம்பு இருக்க வேண்டும். சூரிய பகவானை பார்த்து கையில் இருக்கக்கூடிய இனிப்பு சுவை நிறைந்த தண்ணீரை 7 முறை கொஞ்சம் கொஞ்சமாக தரையில் விட வேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீரை தரையில் விடும் பொழுதும் உங்களுடைய கோரிக்கையை சூரிய பகவானிடம் வையுங்கள். அதாவது தொழிலில் லாபம் பெற வேண்டும் என்றால் அந்த கோரிக்கையை வைக்கலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் அந்த வேண்டுதலை வைக்கலாம். அல்லது பெயர் புகழ் பதவி உயர்வு தேவை என்றால் அதை வேண்டுதலாக வைக்கலாம். வேண்டுதல் வைப்பது உங்களுடைய விருப்பம் தான். ஏழு முறை இந்த இனிப்பு நிறைந்த தண்ணீரை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்து வேண்டுதலை முடித்துக் கொண்டு சொம்பை தரையில் வைத்து விட்டு, சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கிய இந்த பரிகாரத்தை தினம் தினம் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் செய்து வர வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர நீங்கள் எதிர்பாராத ஒரு நல்ல மாற்றம் உங்கள் வாழ்வில் அமையும். அதன் பின்பும் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்வதில் தவறு கிடையாது. நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிரந்தரமான வருமானத்தை பெறலாம். நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான தொழில் அமைய நிரந்தரமான வருமானம் அமைய இதைவிட சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரம் வேறு இதுவும் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment