Monday, July 18, 2022

இன்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்வு அதிமுக ஆட்சியில் நிகழ்ந்திருந்தால்......

 வைகோ முதல் ஆளாக கண்ணீர் வடிச்சி கருப்புத் துண்ட தூக்கி தூக்கிப் போட்டு இது அக்கிரமம் என்று அழுது புலம்பியிருப்பார்........

சிலர் பாசிச அரசின் அடிமை ஆட்சி,அதற்கு நீதி வேண்டும் என முகநூலில் பதிவுகளை போட்டு தெறிக்க விட்டுருப்பார்கள்.....
கம்யூனிஸ்ட்கள் கற்பனைக்கெட்டாத சில பல வாசங்கங்களை தூவிவிட்டு போராட்டக் களத்தை தூண்டிவிட்டிருப்பார்கள்.....
அழகிரி சத்யமூர்த்தி பவனிலிருந்து ஆவேச கதகளி ஆடியிருப்பார்....
இதுபோக பகுதிநேர சமூக செயற்பாட்டாளர்கள்,
கவின்மலர்,
எவிடென்ஸ் கதிர்,
சுந்தரவள்ளி,
சுந்தர்ராஜன்,
கோவன் குழு,
மே17 திருமுருகன் காந்தி,
ஆளூர் நவாஸ்,
பத்தாதுக்கு சில இயக்க செயற்பாட்டாளர்கள் என மொத்த குழுவும் களத்தில் இறங்கி இதை அதிமுக திட்டமிட்டு செய்திருக்கிறது என்கிற ரேஞ்சில் மக்கள் மத்தியில் பரப்பி இருப்பார்கள்.......
இவர்களின் அரசியல் வஞ்சகத்தை, உணர்ச்சிமிகுந்த உரைகளை எல்லாம் வெட்டி ஒட்டி கடைக்கோட்டு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் வேலையை,
குணசேகரன்,
கார்த்திகைச்செல்வன்,
நெல்சன் சேவியர்,
கார்த்திகேயன்,
தம்பி தமிழரசன்
நக்கீரன் குழுவினர் சிறப்பாகச் செய்திருப்பார்கள்...........
நான் ஒன்றை மட்டும் இங்கே உரக்க பதிவிடுகிறேன்..
அரசியலை மக்களுக்காக செய்யுங்கள்.....ஆதாயத்திற்காக செய்யாதீர்கள்....
மரணங்களை மனிதநேயத்தோடு பாருங்கள்...அதில் அரசியல் மாற்றத்தை தேடாதீர்கள்......
பிணந்தின்னிக் கழுகுகள் பிணம் விழும் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்,,
அது அரசன் பிணம் என்றாலும் ஆண்டி பிணம் என்றாலும்....ஒரு நாள் ஆதாயச் சூதாடிகளின் மரணமும் மிக மிக கேவலமாக மக்களால் அடைய நேரிடும்......
குழந்தையின் தந்தையாக.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...