Tuesday, July 19, 2022

மத சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ளுங்கள் தவறில்லை.

 அய்யா வணக்கம். நேற்று MP ஒருவர் திராவிட மாடல் என்று கூக்குரல் எழுப்பி ஒரு பூமி பூஜை யை தடை செய்வதை பார்த்து அதிர்ந்து போனேன். அந்த சாஸ்திரிகள் அல்லது சிவாச்சாரியர் மௌனமாக எழுந்து நின்று பார்த்தது மனதில் தீராத வேதனை அளித்தது. நான் ஒரு சைவ குல இந்து. பிராமணர் அல்லர். ஆனால் எனது சமயம் எனக்கு என்ன சொல்லி கொடுத்து இருக்கிறது என்றால், இறைவனை அருகில் இருந்து மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, வேள்விகள் செய்து இந்த உலக அமைதிக்கு வழி வகை செய்பவர்கள் பிராமணர்கள். வேத வேள்விகள் கற்ற அவர்கள் கோயில் கும்பாபிஷேகம் , வீட்டு கிரஹ பிரவேசம் சமீபத்திய நடிகர் தந்தையின் சதாபிஷேகம், கணபதி ஹோமம் முதலிய எல்லா மங்கள காரியங்களையும் முன்னின்று செய்யும் நல்ல ஆத்மாக்கள். எனவேதான் சைவ திருமுறை வாழ்க அந்தனர் வானவர் ஆணினம். வீழ்க தன் புனல் வேந்தனும் ஓங்குக. ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே... சூழ்க வையமும் துயர் தீர்க்கவே என்று சொல்கிறது. எங்கு அந்தனர் மகிழ்ச்சியுடன் வாழ்கிறாரோ அங்கு நன்மை சிறக்கும். எங்கு வேள்விகளும் வேத பாராயணங்களும் தடுக்க படுகிறதோ, எங்கு அந்தனர் பதை பதய்க்கிறரோ அங்கு வளர்ச்சி குன்றும். துன்பம் அதிகரிக்கும். அது திராவிட மாடல் விரைவில் அறிந்து கொள்ளும்.அல்லது முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...