Tuesday, July 19, 2022

ஓடி ஓடி உழைத்தாலும் கையில் பணம் தங்கவில்லையே என்ற கவலை உள்ளவர்கள், இந்த குறிப்புகளை சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் வீட்டில் பணம் நிரந்தரமாக தங்கும்.

 ஒரு சிலரது வீட்டில் பணம் அதிகமாக வந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் அந்த பணம் ஏதாவது ஒரு வகையில் அதிகமாக செலவாகிக் கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் மனதில் கவலை கொண்டு தான் இருப்பார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் சேமிக்க முடியவில்லை என்ற மன வருத்தம் அவர்களை வாட்டிக் கொண்டே இருக்கும். இதனை எப்படி சரி செய்வது என்பது அவர்களுக்கு புரியாது. ஆனால் சில ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வரும்பொழுது தேவை இல்லாத விரய செலவுகளை தவிர்த்து விட்டு, பணத்தை சேமிக்க முடியும். பணம் வீட்டில் தங்க லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும். வாருங்கள் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி  விடப்படுகிறதோ, பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ, அங்கெல்லாம் செல்வம் குவியும். எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது, அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட  தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும். எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ, எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும், இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம்  செல்வச் செழிப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் காலை அரச மரத்திற்கு அபிஷேகம் செய்து விட்டு, வீட்டில் மகா லட்சுமி தேவிக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமி தேவியை மனதார நினைத்து மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும். இவ்வாறு மாதம் தோறும் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரித்து பணம் எப்போதும் உங்கள் கையில் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...