Thursday, July 21, 2022

தலைக்கனம் தலையெழுத்தையே மாற்றி விடும்..

 தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பகுதறிவுவாதி ஒருவர் இருந்தார்.

அடர்த்தியான புருவம், பெரிய மீசை,நல்ல உடற்பயற்சி செய்த உடல்வாகு உள்ளவர்.கடவுள் நம்பிக்கை இல்லாததால்,கலாசாரம்,ஒழுக்கம்,பண்பாடு இது எல்லாம் தேவையற்றது, எப்படி வேண்டும் என்றாலும் விருப்பம் போல் வாழலாம் என வாழவிரும்புபவர். நடிப்பில் மன்னன்.அவர் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டி மகிழ்வார்.
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.ஊர் எல்லை வரை வந்து விட்டார்,அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்.நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதமும் நெற்றியில் திறுநீர் பட்டையும் சந்தனத்துடன் கலந்த குங்குமபொட்டும் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது.இது பகுத்தறிவுவாதிக்கு எரிச்சலை மூட்டியது.
இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்.
என்னப்பா,முடி வெட்ட எவ்வளவு?சேவிங் பண்ண எவ்வளவு? என்றார்.
அவரும், முடிவெட்ட நூறு ருபாய் சேவிங் பண்ண முப்பது ருபாய் என்று பணிவுடன் கூறினார்.
பகுத்தறிவுவாதி சிரித்தபடியே,
அப்படின்னா, என் தலையை சேவிங் பண்ணு,என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்.
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை, வேலையை ஆரம்பித்தார்.
பகுதறிவுவாதி அடுத்த முயற்சியைத் துவங்கினார்,இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு,கோல் எங்கே போச்சு?
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து.சார் ரொம்ப சிரிப்பா பேசுறிங்க, என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.
இதிலும் பகுதறிவாதிக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.
எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு?
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்,
இதைத்தானே பகுதறிவாதி எதிர்பார்த்தார்.
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பகுதறிவாதியின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார், சார்க்கு இந்த மீசை வேணுங்களா? பகுதறிவாதி உடனே,ஆமாம் என்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,மீசை வேணுமுன்னிங்களே சார் இந்தாங்க.
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய், அதிர்ச்சியில் உறைந்து போனார் பகுதறிவுவாதி.
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
சார்க்கு இந்தப் புருவம் வேணுங்களா.
இப்போது பகுதறிவுவாதி சுதாரித்தார்.
வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான், என்ற பயத்தில் உடனே சொன்னார், இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.
சார்தான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல?அதைக் குப்பைல போட்டுடுறேன், சார்பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்,முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்,அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் பணத்தை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பகுதறிவாளர்.
நம்முடைய,அறிவும்,புத்தியும்,திறமையும்,அதிகாரமும்,அந்தஸ்தும்,பொருளும், மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர யாரையும் மட்டம் தட்ட அல்ல.இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.தலைக்கனம் நம் தலையெழுத்தையே மாற்றி விடும்......😃

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...