Tuesday, July 26, 2022

வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை நிச்சயமாக இனிக்கும் இது தாங்க உண்மை...

 ஓர் இளம் தம்பதிக்குள் சிறு வாக்குவாதம். மனைவியை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள்ளே அனுப்பி விட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்,

"தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் நீங்கள் உங்கள் மனைவியைக் கடிந்துக் கொண்டீர்கள் என நான் தெரிந்துக் கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
"ஒண்ணுமில்லை அங்கிள். ச்ச்சும்மா தான். நானும் கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியாக இருக்கு. இந்தப் பெண்களே இப்படித் தான் அங்கிள். சும்மா கடுப்பேற்றீட்டு இருப்பாளுக..."
அதைக் கேட்ட முதியவர் சிறுப் புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோட தான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. இரண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒண்ணாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்டீலே இருந்தோம். என் மனைவிக்குத் துரதிஷ்டவசமாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு னு நோய்கள் இருந்துச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமாக இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையாக கவனிச்சிக்கிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையா உணருகிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாகிடுச்சு, இரவுகள் ரொம்பவே வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க மொபைல் நம்பர் இருக்கு, ஆனால் நான் அழைச்சால் இனி பேச மாட்டாங்க, நான் அவங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணா கூட படிக்க மாட்டாங்க...
முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில் தனியா படுத்திருக்கேன்...
சமையலறைக்குத் தனியா போறேன், சமையல் னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒண்ணா போக அவங்க இல்லை...'' என்றார்
விழியோரம் நீர் தேங்க...
சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே தொடர்கிறார்...
''அதான் தம்பி, அவங்க இருக்கும் போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் நான் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னாலேயே போயிட்டியேம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வர்றேன்...''
புறப்பட்டப் பெரியவரையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். அந்தப் பெரிய அங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவி தானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை எனக் கணவனும், நம் கணவன் தானே எப்படிப் பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, நாம் Hi sir how r u? Nice to Meet You என்கிறோம். இடையில் இருமல், தும்மல் வந்தால் கூட, I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, உடனே Excuse Me Sir சொல்கிறோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம் தான் ஆகியிருக்கும். அதன் பின் அவரைச் சந்திப்போமா என்றே நமக்குத்தெரியாது. ஆனாலும், எவ்வளவு மரியாதை தருகிறோம்?
ஆனால் வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கின்ற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவி தான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100க்கு 90 சதவிகிதம் 'இல்லை' என்பது மட்டும் தான்.
மனைவி ஆசையாகச் சமைத்துப் பரிமாறுவதை பிரமாதம் னு கணவன் பாராட்டுவதும் இல்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன் கிட்ட, 'ரொம்ப வேலையா? காலையில் இருந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்று மனைவியும் சொல்வதும் இல்லை...
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் நன்றாகப் புரிந்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை நிச்சயமாக இனிக்கும் இது தாங்க உண்மை...
கதையின் நீதி :-
தாய்க்குப் பின் தாரம் மட்டும் தான் ஒரு ஆணின் இன்பம் துன்பம் என்று அனைத்திலும் பங்கெடுப்பாள் நல்ல மனைவி மட்டும் இல்லைங்க நல்லக் கணவன் அமைவதும் கூட இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் தான் √
இருபாலருக்கும் பொருந்தும்
ம்ம்ம் அவரவர்க்கு வாய்த்த துணையை பொருந்துதான் நல்வாழ்க்கை. ம்ம்
May be an image of 2 people, beard, people standing and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...