Thursday, July 28, 2022

வள்ளலார் கொள்கைகளில் முதன்மையானது எது !

 வள்ளலார் கொள்கைகளில் முதன்மையானது கடவுள் ஒருவரே என்பதுதான் .

அந்தக் கடவுள்தான் அருட்பெருஞ் ஜோதி என்பதாகும்.
வள்ளலார் காட்டியக் கடவுள் என்பவர் .. பலகோடி அண்டங்களையும் உலகங்களையும்,
நிலம்,
தண்ணீர்,.
அக்கினி,
காற்று,
ஆகாயம், மற்றும் சூரியன் ,சந்திரன், நட்சத்திரம் போன்ற கிரகங்களையும்.
உலகில் உள்ள அணுக்களையும்,அணுக்களால் உருவாக்கப்படும் உருவங்களையும்.
உருவங்களுக்கு முதற்க் காரண காரியமாக இருக்கும் ஆன்மாக்களையும்,,
தோற்றம் மாற்றங்களை செயல்படுத்தும் மாயை என்னும் அதிகாரிகளையும்,
படைத்து,காத்து,
அழித்துக் கொண்டும் தோற்றம்,
மாற்றங்களை இடைவிடாமல் செய்து கொண்டு இருக்கும் அருள் ஒளியே அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுளாகும்.
இந்தக் கடவுள் இதற்கு முன்பு ,
சமய மதங்களில் சொல்லிய கடவுள்களில் ஒருவர் அல்ல !
வேதம் ஆகமம்,
புராணங்களில்,
மற்றும் இதிகாசங்களில் சாத்திரங்களில் சொல்லிய கற்பனைக் கடவுள்கள் அல்ல ! என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் காட்டியக் கடவுள்தான் உண்மையானக் கடவுள் !
வள்ளலார் காட்டிய கடவுளை,
கோவில்களிலோ, ஆலயங்களிலோ மசூதிகளிலோ,சர்ச்சுகளிலோ, பிரமிட்டுகளிலோ,வேறு எங்கும் காணமுடியாது.
எல்லா உயிர்களிலும்,
உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பதுவே ஆன்மா என்னும் உள் ஒளியே கடவுளின் ஏகதேசமாகும் .
ஆதலால் உயிர்களிடத்தில் அன்பு,
தயவு,
கருணை
செலுத்தினால் மட்டுமே கடவுளை அறியமுடியும் உணரமுடியும்.
வேறு வகையால் கடவுளைக் காணவும் முடியாது,வெளியே யாராலும் காட்டவும் முடியாது.
இந்த உண்மையை வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார்.
வள்ளல்பெருமான் கொலகைகளில் முதன்மையானது உண்மையானக் கடவுள் யார் ?
என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
அக்கடவுளை தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம்,
சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டு இருப்பதால் .அவைகள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டும் மறைத்துக் கொண்டும் இருக்கின்றது .
அதற்கு அறியாமை என்னும் திரைகள் என்று பெயர்.அந்த திரைகள் உண்மையான மெய்ப்பொருளை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் வள்ளல்பெருமான்
அறியாமை என்னும் திரைகள் எப்பொழுது நீங்குகிறதோ அப்போதுதான் கடவுளின் உண்மை சொரூபம் என்னவென்று தெரியும்.,கருணை என்னும் கருவியைக் கொண்டுதான் திரை மறைப்பை நீக்க முடியும்...
வேறு எந்த வகையாலும் ,வேறு எந்த வழிகளாலும் திரைகளை நீக்க முடியாது என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அழுத்தமான செய்திகளாகும்.
கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார்.
எனவே உண்மைக்கடவுள் யார் ?என்பதை முதலில் அறிந்து தெரிந்து கொள்வது வள்ளலாரின் கொள்கைகளின் முதன்மையானது என்பதை சன்மார்க்க அன்பர்களும்,மற்றும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு ,
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற்று,
இல்லறம் நல்லறமாக மகிழ்சியுடன் வாழ்வோம்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...